இடுகைகள்

சாதி இருப்பைத் தக்கவைக்கும் முயற்சி

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி முன்வைத்தபோது அறிஞர் பி.ஆ.அம்பேத்கர் இட ஒதுக்கீடு தேவை என்று வாதாடினார். அந்த வாதத்தில் இந்த இட ஒதுக்கீடு இந்தியாவிலிருக்கும் சாதீயப்படிநிலைகளை ஒழித்துக்கட்டிவிடும் என்று சொன்னதாகக் குறிப்புகள் இல்லை. 

வெளிகளில் விளையும் மரபுகள்: காவேரியின் இந்தியா கேட்

படம்
எழுத்திலக்கியங்கள் தோன்றாத காலகட்டத்தில் பெண் தலைமை தாங்கிய சமூக அமைப்பு இருந்ததாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வேட்டைப் பொருட்களை உண்டு வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாக ஓரித்தில் தங்கி வேளாண்மை செய்வதையும் மீன் பிடித்தலையும் கற்றுக்கொண்போது இனவிருத்தியின் பொருட்டுப் பிள்ளை சுமத்தல் வினைக்காகப் பெண்கள் ஓரித்தில் தங்கவேண்டியவர்களாக ஆக்கப்பெற்ற நிலையில் பெண் தலைமை தாங்கிய சமூகம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்தான் ஆண்மையச் சமூகம் உருவானது என்றும் மானிடவியல் கருத்துகள் சொல்கின்றன. ஆனால் தமிழின் இலக்கியப்பிரதிகள் பெரும்பாலும் பெண் தலைமைக்காலத்தைத் தாண்டி ஆண் தலைமைக் காலமான அரசுருவாக்கக் காலகட்டத்தையே நமக்குக் காட்டுகின்றன. 

ஷங்கரின் 2.0 - நடிகர் மையமும் இயக்குநர் மையமும் கலந்த கலவை

படம்
ஒரு பேருந்தில் தன்னருகே நிற்கும் வயதானவருக்குத் தான் அமர்ந்திருக்கும் இருக்கையை அளித்துவிட்டு நின்றபடியே பயணம் செய்யும் ஒருவரின் செயல் பாராட்டத்தக்கது. மனிதாபிமானம் மிக்கவர் என்று பாராட்டு அவருக்குக் கிடைக்கக் கூடும். இயக்குநர் ஷங்கர் எப்போதும் தனது “இயக்குநர் இருக்கை”யைத் தன் விருப்பத்துடன் இன்னொருவருக்குத் தருகிறார்.

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி

படம்
உடனடி நினைவு எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார்.

நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்

படம்
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

பிரபஞ்சன் :நினைவலைகள்

படம்
  அகல்யாவை மேடையேற்றியபோது ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்றவுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. அந்நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.