திருப்பிக் கொடு
வட்டங்களும் சிலுவைகளும் -பத்துக் குறுநாடகங்களின் தொகுப்பு என்னும் எனது நூலில் உள்ள இந்நாடகம் நமது பள்ளிக் கல்வியின் மீதான கோபத்தை அங்கதமாகச் சொல்ல முயன்ற நாடகம். ஜெர்மனியில் எழுதப்பட்ட இந்நாடகத்தை நான் தழுவல் செய்த ஆண்டு 1996 எனவே அந்தக் காலம் சார்ந்த நிகழ்வுகளும் எண்ணங்களும் இடம் பெற்றுள்ளது . நான் செயல் பட்ட கூட்டுக்குரல் நாடகக் குழுவிற்காக இந்நாடகத்தைத் தழுவி எழுதினேன் என்றாலும், அதன் பின் தமிழ்நாட்டில் கல்வி மீது அக்கறை கொண்ட பல நாடகக் குழுவினரும் மேடையேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனது மாணவரும் திரைப்பட நடிகருமான சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழு முந்நூறு மேடைகளில் நிகழ்த்தியுள்ளது