கவியின்பம் அல்லது இலக்கிய இன்பம் என்ற தலைப்புகளில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்ததுபோல இப்போதைய மாணாக்கர்களுக்கு - இப்போது எழுதப்படும் இலக்கியங்கள் பற்றி எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள் இல்லை. இலக்கியம் பற்றி எழுதப்படுவன எல்லாமும் விமரிசனங்களாக - விமரிசனங்கள் என்ற பெயரில் போற்றுவது, தூற்றுவது, தள்ளி வைப்பது, கூட்டம் சேர்ப்பது, இருட்டடிப்பு செய்வது, வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனத் தொடர்ந்து நடக்கிறது. நடப்பது நடக்கட்டும். நடப்பது நன்றாக நடக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது