இடுகைகள்

அரங்கியல் பெருவெளியை நிரப்பிய ந. முத்துசாமி.

படம்
அரங்கியலாளர் ஒருவரை அவரது நாடகமேடையேற்றம் சார்ந்தே கொண்டாட வேண்டும்; விமரிசிக்கவேண்டும். அதுவே அவருக்கு   உவப்பானது. விமரிசிக்கிறவனின் நிலைபாட்டுக்கும் சரியானது.   ந.முத்துசாமியின் அனைத்து நாடகங்களும் ஒரே தொகுதியாக கே.எஸ். கருணாபிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு என் முன்னே இருக்கிறது. அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று இங்கிலாந்து . அந்நாடகம் கால் நூற்றாண்டிற்குப் பிறகு திரும்பவும் புதிய நெறியாள்கையில் -இடதுசாரி நாடகக்காரராக அறியப்படும் பிரளயனால் மேடையேற்றம் கண்டுள்ளது. நாடகப் பிரதிகளின்   வழியாகவும் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் களத்தின் வழியாகவும் உலக வரைபடத்திற்குள் தமிழ் மொழியையையும் தமிழ் அரங்கியலையும் கொண்டுபோன ந. முத்துசாமியைப் பற்றிப் பேச ஏற்ற தருணம் இது.

நாகேஷ்: உடல் மொழியின் பரிமாணங்கள்

படம்
துன்பத்தை விளைவிப்பதும் , அழிவைத் தோற்றுவிக்காததுமான ஒரு பொருளைக் கருத்தாகக் கொண்டு இயற்கையாக உள்ள மனித நிலைக்கு மாறாக , தாழ்ந்த நிலையில் உள்ளவனைச் சித்திரிக்கும் நாடகம் இன்பியல்   ( Comedy) நாடகம் .   அரிஸ்டாடிலின் கவிதையியல்

தலைப்பில் தங்கும் கதைப்பொருள் : போகன் சங்கரின் பொதி

நிகழ்கால எழுத்தாளனிடம் எதையெழுதலாம் என்று கேட்டால் எதையும் எழுதலாம்;  இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறையெல்லாம் இல்லையென்று சொல்லக்கூடும். அப்படிச் சொல்வது முழுமையான உண்மையல்ல. நிகழ்காலத்தில் எழுதப்படும் எல்லாமும் ஏற்கெனவே இருக்கும் வரையறைகளின் மாற்றுவடிவங்களேயன்றி, முற்றுமுழுதான புத்தாக்கமல்ல.

வடிவமைத்துக் கொண்ட வடிவேலு

படம்
நகையென்பது சிரிப்பு   அது முறுவலித்து நகுதலும் , அளவே சிரித்தலும் , பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப.     -  தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் சூத்திரத்திற்கு ( 3)  பேராசிரியர்  உரை ===========================   

துணைவேந்தர்கள் என்னும் தோட்டத்து மேஸ்திரிகள்

நமது நாட்டின் உயர்கல்விக்குப் பொறுப்பு வகிப்பன பல்கலைக்கழகங்கள். ஒரு பாடத்தில் பட்டம்பெறவேண்டும் எனக் கல்லூரியில் நுழையும் மாணாக்கர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பிக்கின்ற முறைகளை வகுப்பது, பாடங்களை முறையாகக் கற்றுள்ளனரா? என அறியத் தேர்வுகள் நடத்துவது என மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன. அத்துடன் பட்டமேல் படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்குத் தனது வளாகத்திலுள்ள சிறப்புத் துறைகளின் வழியே முதுநிலைப் படிப்புகளையும், அவற்றின் தொடர்ச்சியாக ஆய்வுப்படிப்பு களையும் தருகின்றன. 

வில்பூட்டுச் சிறுகதை

“நவீனச் சிறுகதைகளில் வடிவ ஒழுங்கைத் தேட வேண்டியதில்லை” என்பதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றாலும், வடிவ ஒழுங்கில் இருக்கும் கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் மறுப்பதற்கில்லை. தான் எழுதும் சிறுகதையை வடிவ ஒழுங்குடன் எழுதவேண்டுமென நினைக்கும் கதாசிரியர், வடிவ ஒழுங்கிற்காக மட்டும் மெனக்கெடுகிறார் என்பதில்லை.

வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?

நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.