தமிழ்ச்சினிமா அரசியலான கதை
”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்” எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது.