சாதிவாரிக் கணக்கெடுப்பு
இந்த முறையும் தவற விட்டுவிடும் வாய்ப்பு இருந்தது. நல்ல வேளையாக அது நடக்கவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டது என்ற அறிவிப்புக்குப் பின் பத்து நாட்கள் வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை. கட்டாயம் நாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும். அரை மனதோடு தான் சென்னைக்குச் சென்றோம். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பக்கத்து வீட்டுக்காரரிடம் வீடு பத்திரமாக இருக்கிறதா? என்று கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்பாளர்கள் வந்தார்களா? என்றும் கேட்டு வைத்தோம். ‘ வரவில்லை’ என்று சொன்ன பின் தான் நிம்மதி.