இடுகைகள்

நுண்ணரசியலும் பேரரசியலும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

பொது உளவியலின் அரசு

படம்
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளைத் தகர்த்த ஒன்றாகத் தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில்   உருவான அரசை பொது உளவியலின் அரசு என வரையறை செய்யலாம். 

மே நாள் - மாணவப்பருவ நினைவுக்குறிப்பு

படம்
முதுகலை படித்தபோது இதழியல்,ஒப்பீட்டிலக்கியம், நாடகவியல், நாட்டுப்புறவியல் என நான்கு விருப்பப்பாடங்கள் இருந்தன. அதில் எனது விருப்பப்பாடம் இதழியல். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இதழியல் பாடத்திற்கென இளம் விரிவுரையாளராகத் தமிழ்- இதழியலில் முனைவர் பட்டம் செய்திருந்த அ.சாந்தா அவர்கள் இருந்தார். மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் வழி நடத்துவார். எனக்கு ஓராண்டுகளுக்கு முன்னால் அதே விருப்பப்பாடத்தைத் தேர்வுசெய்த முன்னோடிகள் ஆர்.பாலகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் . அவர்களே இந்தப் பாடத்தை விரும்பிப் படித்து என்னைத் திருப்பி விட்டவர்கள். இந்தியக் குடிமையியல் பணித்தேர்வை ஆர்.பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வெற்றிபெற்றவராக்கியதே அந்த இதழியல் விருப்பப்பாடம் தான். நான்கு பருவத்தில் மூன்று தாள்கள் உண்டு. கடைசிப்பருவத்தில் செய்முறைப் பயிற்சிகளே அதிகம் இருக்கும்.

நீதிமன்றமும் சட்டமன்றமும் - இரண்டு குறிப்புகள்

படம்
இரண்டு நாட்களாக முகநூலில் வலம் வரும் இவ்விரண்டின் மீது எனது கருத்தை எழுத நினைத்தேன். ஆனால் ஏனோ எழுதியெழுதி அழித்துவிட்டேன். இப்போது  சொல்லாமல் விட்டால் தூக்கம் வராது என்பதுபோலத் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டில் ஒன்று பேரறிவாளன் தொடர்பானது; இன்னொன்று கருத்துக்கணிப்புகளை முன்வைத்தல் தொடர்பானது. இவ்விரண்டின் தொடர்பில் நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பணிக்காலம்  சில புரிதல்களைத் தந்துள்ளது. அந்த் அடிப்படையிலேயே இதனைச் சொல்கின்றேன் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றுத் திரும்பியவர் பேரறிவாளன். அவர் மீது கொலைக்குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட மரணதண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும் குறித்தெல்லாம் எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும் அதனை இப்போது விவாதிப்பதில் பொருள் எதுவும் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் காலத்தை முடித்து வெளியே வந்துவிட்டார். சிறையில் இருந்தபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின்னும் தனது கல்வி ஆர்வத்தைத் தக்கவைத்துத் தொடர்ந்து கற்றுத் தேர்வு எழுதி வழக்குரைஞராகத் தன்னைத் ...

அரசியலற்ற அரசியல் பதிவுகள் -தேர்தலுக்குப் பின்

படம்
  இந்த முறையும் வாக்களிக்கவில்லை இந்திய/தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின் போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். தனிமனிதரின் அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடு ‘வாக்களிப்பு’. அதைத்தவற விட்டிருக்கிறேன். அதைப்பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் எனது மாணவப்பருவத்தில் தேர்தல் பாதையை நிராகரித்த இயக்கங்களின் கருத்தியல் நிலைபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவன் நான்.

தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

படம்
தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின்போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசவும் செய்துள்ளேன். அந்தப் பேச்சில் தமிழ்நாட்டுத் தேர்தல்களும் விவாதப்பொருளாக இருந்துள்ளன. அண்மையில் கனடாவிற்குச் சென்றபோது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை விவாதிப்பதற்காகவே ஓர் அறைக்கூட்டம் (ஏப்ரல்/11/ஞாயிறு முற்பகல்) ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலும் விவாதமும் எனத் திட்டமிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் புலனம் ( Watts App) வழியாக வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்கேற்றனர்.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.

திரளின் மனநிலைகள்

படம்
 பாவனைகளும் தந்திரங்களும் நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

தேர்தல் காலச் சொல்லாடல்கள்

படம்
வேறுபாடுகளைக் கூர்தீட்டி மதம் இனம் மொழி சாதி மண் மட்டையெனப் பேசிக் கொலைகளை நியாயப்படுத்துகிறது பெரும்பான்மை வாதமென்னும் பாசிசம்

மக்கள் நலக்கூட்டணி என்ற கானல் நீர்

எப்போதும் தேர்தல்களைத் தொடங்கிவைக்கும் வேலையை ஊடகங்கள் தான் செய்கின்றன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக்கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். முதல் தந்ததையே அடுத்தநாள் புதிதுபோலப் பரிமாறலாம். முதன்மை உணவை மாற்றாமல், கூட்டு, பொரியல் மாற்றம், ஊறுகாய், அப்பளம் மாற்றம், சாம்பார், சட்னி மாற்றம் என மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கலாம். சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த ஐந்து மாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தொடர்ந்து தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கணக்குகள், கட்சிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், வெளிப்படையான சவால்கள், புதுப்புது கட்சிகளை உருவாக்குதல் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விருந்துகளும் பரிமாற்றங்களும் நடக்கின்றன. கூட்டணி உர...

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்

படம்
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்து எல்லாத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கூட்டணி தான் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது அக்கூட்டணிக்குத் தலைமை தங்கும் கட்சி மட்டும் தான். கூட்டணியில் தனியொரு கட்சிக்குப் போதிய எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புக் கிடைத்து விடும் நிலையில் தனியே ஆட்சி அமைப்பதைக் கூட்டணிக் கட்சிகளால் தட்டிக் கேட்க முடியாது; தடுத்து விடவும் முடியாது. இந்த நிலையையும் தாண்டி 2006 இல் ஆட்சி அமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையைத் தனியொரு கட்சியாகத் திமுக பெற்றிராத போதிலும், அதன் தலைவர் மு.கருணாநிதி ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி முடித்து விட்டார். தற்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தா...

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

படம்
 அடக்கமும் அதன் நிமித்தங்களும் இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

படம்
ஏமாறுதல் - ஏமாற்றுதல் என்ற இரண்டு சொற்களில் எது முந்தியது என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததைப் போல இதற்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் எப்போது தொடங்கியதோ அப்போதே ஏமாற்றுதலும் ஏமாறுதல் தொடங்கியிருக்கிறது. ஆதாமை ஏவாளும், ஏவாளை ஆதாமும் ஏமாற்றவே செய்திருக்கிறார்கள்.

தூக்கம் தொலைந்த இரவானது

படம்
  இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...