இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்மைச் சிறுகதைகள்.

இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.

காசி மாரியப்பன் என்னும் கருத்தியல் கடத்தி

படம்
நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள் எனப் பல தரப்பினருக்கும் ஒருவர் தந்துள்ள அன்பு, மரியாதை, உறவுநிலை, வழிகாட்டுதல் எனப் பல தளத்தைச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய ‘காசி ஐயா’ தொகுப்பை வாசிக்க வாசிக்க எனக்கு முதலில் தோன்றியது ஆசிரியத் தொழிலில் மதிப்புமிக்க பக்கங்களை வாசிக்கிறோம் என்ற மனநிலை. நண்பர் காசி.மாரியப்பன் அளவுக்கு மாணாக்கர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற ஆசிரியராக நான் இருந்ததில்லை என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது. 

திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.

படம்
திருமங்கலம் தொகுதி : வாக்களிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் இல்லை. அதனால் எனது தொகுதியான திருமங்கலத்தில் வாக்களிக்கவில்லை. இருந்திருந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மு.மணிமாறனுக்கே வாக்களித்திருப்பேன். இதை தேர்தல் நாளன்றே பதிவாக எழுதியிருந்தேன். அதற்குக் காரணம் தி.மு.க.வை ஆதரிப்பவன் என்பதைத் தாண்டி மு.மணிமாறனை ஆதரிக்கக் கூடுதல் காரணம் உண்டு. மு.மணிமாறனின் தந்தை சேடபட்டி முத்தையாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. (அவர் மரணத்தின் போது எழுதிய நினைவுக்குறிப்பு பின்னூட்டத்தில் உள்ளது) அவரோடு விரிவான அரசியல் உரையாடல்கள் செய்துள்ளேன். மாணவப்பருவத்திலிருந்து அரசியல் கற்றுத் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளோடு நம்பிக்கை கொண்டிருந்தவர். எனது கிராமம் இருந்த சேடபட்டித் தொகுதியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். எனது வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியவர் அவர். அவருக்காக இரட்டை இலையில் மூன்று தடவை வாக்களித்துள்ளேன்.