ஒரு பாடல்




மரம் தனது இலையிடம் கேட்டது, ” ஏன் இப்படி?”
என்னிலிருந்து உருவானவன் என்பதில் உனக்கு ஏன் சந்தேகம்?

இலை திருப்பிக் கேட்டது.
எனது பெயர் இலை என்றானது எப்போது?
உனது பெயர் மரம் என இருப்பது ஏன்?
இருவருக்கும் இடையே ஏன் இந்த வேற்றுமை
இருவரையும் இணைக்கக் கிளையொன்று இருப்பது ஏன்?

மரம் சொன்னது
‘ தொடர்ந்து நீ பச்சையாய் இருக்கக் காரணம் நான்.
எனவே எனக்கே எல்லாம் தெரியும்.

இலை சொன்னது.
‘ நான் வானத்தைத் தொட்டு விட ஆசைப்படுகிறேன்.
என்னைத் தரையோடு இருக்கச் சொல்கிறாய். அது ஏன்?
மரம் சொன்னது.
‘ அது மண்ணின் மீது கொண்ட காதல் .

மண்ணே நம் எல்லோரையும் பிணைத்து வைத்திருக்கிறது.
உன்னைப் பாதிக்கும்; தாக்கும்
சின்னப் பிரிவைக் கூட ஏற்றுக் கொள்ளாது.
ஆகவே தான் அந்த அன்பை உன்னிடம் அனுப்பி வைக்கிறேன்.

- ஆங்கிலம் வழி தமிழில் அ.ராமசாமி/ 29-05-10
ரமேஷ் பரேக் குஜராத்தியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் : திலீப் ஜாவேரி INDIAN LITERATURE/255/JAN-FEB.2010

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...