கொரோனாவுக்குப்பின் கல்வி: இணையவழிக் கற்பித்தல்
ஒப்புதலும் ஒவ்வாமையும் ----------------------------------------------------------------- பணி ஓய்வுபெற்று ஓராண்டு முடிந்து விட்டது. பணியில் இருந்திருந்தால் இணையவழிக் கற்பித்தலில் ஈடுபட மனம் ஒவ்வாமையில் தவித்துப் போயிருப்பேன். கணினியைப் பயன்படுத்தும் பழக்கமும் அறிதலும் இல்லாததால் ஏற்படக்கூடிய தவிப்பு அல்ல. வகுப்பறைக் கற்பித்தலில் இருக்கும் மன ஒப்புதல், ஈடுபாடு காரணமாக ஏற்படும் தவிப்பு அது.