தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை
அரசவிருதுகளும் கலைஞர்களும் கலை இலக்கியங்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் ஒன்றிய அரசின் அகாதெமிகளான சாகித்திய, சங்கீத, லலித் கலா அகாடெமிகள் முறையே எழுத்துக் கலைகள், நிகழ்த்துக்கலைகள், நுண்கலைகள் போன்றவற்றிற்கும் அவற்றை உருவாக்கிச் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. இம்மூன்று அமைப்புகளில் எழுத்துக் கலைக்கு விருது வழங்கும் சாகித்திய அகாதெமி மட்டுமே மொழி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு விருதினை வழங்குகிறது.