இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள் : காண்டவ வனத்தை முன்வைத்து
மார்ச் 18, சனிக்கிழமை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமி நெறியாள்கையில் மேடையேறிய காண்டவ வனம் என்னும் நாடகப்பிரதியை ந.முத்துசாமி நாடகங்கள் என்ற தொகுப்பில் வாசித்திருக்கிறேன். முழுமையாக இல்லாமல் சில காட்சிகளாக மேடையேறியதையும் பார்த்திருக்கிறேன். அம்மேடையேற்றம் நாடகம் எழுதப்பெற்ற 1991 ஆம் ஆண்டிலா? அதற்கடுத்த ஆண்டிலா? என்பது நினைவில் இல்லை. அப்போது அப்பிரதியின் பெயர் காண்டவ வன தகனம். இப்போது காண்டவவனம். காண்டவ வன தகனம் என்பது மகாபாரத்தில் ஒரு பகுதி.