அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வரவில்லை. ஆனால் பார்த்து முடித்தவுடன் திரும்பத் திரும்ப நினைவில் வந்ததைத் தள்ளவும் முடியவில்லை. பார்த்து முடித்த படம் ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா கூட்டணியில் வந்த 7-ஆம் அறிவு. நினைவுக்கு வந்த படம் 15 வருடங்களுக்கு முன்னால் நடிகர் நாசரின் இயக்கத்தில் வந்த தேவதை. நாசரின் தேவதை சில காரணங்களுக்காக என் நினைவில் இருந்து கொண்டிருக்கும் படம். அதற்கு முன்பே சில படங்களுக்காக எனது முகம் சினிமாக் காமிராவினால் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் தேவதைதான் திரையில் என்னைக் காட்டிய முதல் படம். என்னைத் திரையில் காட்டிய தேவதை ஒரு வாரத்துக்குள் முடங்கிய படம் என்றால், அதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் திரைக்கு வராமலேயே முடங்கிப் போய் விட்டன. நடிகனாக வேண்டும் என்ற வெறியெல்லாம் இல்லாததால் தேவதைக்குப் பின் அந்த முயற்சியைக் கைவிட்ட சொந்தக் கதையை இத்தோடு நிறுத்துக் கொள்ளலாம். இரண்டாவது காரணம் இளையராஜாவின் இசை. தினசரி கேட்டுக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இனிய கீதங்கள் தொகுப்பில் தேவதை படத்தில் இடம் பெற்ற “தீபங்கள் பேசும் கார்த்திகை ம