இடுகைகள்

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

படம்
பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம்.

மனக் கண்ணாடிப் படிமங்கள்: சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல்

சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை குற்றாலம் போக வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அந்தக் கதையை ஒரு தடவை வாசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

வலிய எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்கள்:சு.சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி

விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் என அழைக்கப்படும் ஆய்வுகள் பெரும் பாலும் வட்டாரங்களையே தரவுகளுக்கான களன்களாகக் கொள்கின்றன. அவ்வட்டாரத்திலும் கூட முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளே வரலாற்றுக்கான தரவுகளாக அமைய முடியும் எனக் கருதாமல் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அகப் புற மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைக் கூட விளிம்புநிலை ஆய்வுகள் முக்கியத்துவப் படுத்தி ஆய்வுகளைச் செய்கின்றன.

முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு

பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

கற்றதனாலாய பயன் : சிவகாமியின் அன்றும் இன்றும் கொல்லான்

தமிழகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருண்மைகளில் ஒன்று கல்வி. கடந்த ஓராண்டாக சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரைப் பத்திரிகைகள் அச்சிட்டுக் கொண்டே இருக்கின்றன. சமச்சீர்க் கல்வி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்கப் போகிறது என்பது ஒரு புறம் சரியானது தானே என்று தோன்றினாலும், இன்னொரு புறம் இப்போது கிடைக்கும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கி விடுமோ என்ற அச்சமும் உண்டாகாமல் இல்லை.

ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள் : நீல பத்மநாபனின் தனி மரம்

இலக்கியம் மனிதர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பலரும் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்கள். ஒத்துக் கொள்பவர்களுக்குள் அதை வெளிப்படையாகச் செய்யலாமா? மறைமுகமாகச் செய்ய வேண்டுமா? என்பதில் மட்டுமே வேறுபாடுகள் உண்டு.

பின் வாங்குதல் என்னும் பேராண்மை :கந்தர்வனின் சாசனம்

எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது கவி பாரதியின் கவிதை வரிகள். இத்தகைய கனவு வரிகளின் பின்னணியில் ‘வேறுபாடுகளற்ற சமுதாயம்’ என்னும் பெருங்கனவு இருக்கிறது என்பதை நாமறிவோம். ரசித்து ரசித்துச் சொல்லப்படும் இந்தக் கனவை முன் மொழிந்த உலகச் சிந்தனையாளர்கள் பலருண்டு.