நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்
கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது. இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை