இடுகைகள்

பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்

படம்
இது புதுமை சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.

பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு

படம்
பேச்சு வழக்கில் ஒரு பெயரைச் சுருக்கிச் சொல்வது குற்றமில்லை. ஆனால் அதுவே அவரது அதிகாரப்பூர்வ பெயராக ஆகாது. இவை அரசு பின்பற்றும் தரப்படுத்தப்பட்ட மொழியின் வழக்காறல்ல. இலக்கியப் பரப்பில் இருந்த சுந்தர ராமசாமி என்ற பெயரைச் சுருக்கி அவரது அன்பர்கள் சு.ரா. என்று அழைத்தனர். அவரை அழைத்ததுபோல அ.ராமசாமி என்ற பெயரை அ.ரா. என்று சுருக்கிச்சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. ஒரு ஆளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இல்லை. அதற்கெனத் தனி நடைமுறைகள் உள்ளன.

வரலாற்றில் ஒளிந்துகொண்டு பகடி ஆடுதல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

படம்
சில பொதுக்குறிப்புகள் புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாவதும், மறுதலையாக விவாதிக்கத் தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதும் நிகழ்கின்றன. மனித வாழ்க்கை கண்டு கொள்ளப்படுவதிலும் கவனிக்கப்படாமல் போவதிலும் வினை யாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்வதும் விளக்குவதும்கூடத் தற்காலிகமானவைதான்.

நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை

படம்
  ”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது.

இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்

படம்
பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு இவ்விருவெதிர்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுவது கலையின் வேலை; கலைஞர்கள் வேலை. பொதுப்புத்தியும் கூடப் பாதிக்கப்பட்டோருக்காக இரங்கும்; கூக்குரல் எழுப்பும். அந்த வகையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம்

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

படம்
  அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் என் நெஞ்சில் புடைத்து எழுகின்ற வலியைப் பொத்திக்கொண்டு நான் உயிர்க்கின்றேன்