இடுகைகள்

தொலைநோக்கில் ஒரு நோக்கு

படம்
2003 -இல் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உயிர்பலித் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பண்பாட்டாய்வாளர்கள் மற்றும் செயல் பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் ஆளானது. ஆனால் வெகுமக்கள் அச்சட்டத்தை எதிர்க்கும் மாற்றுவடிவங்களைக் கண்டுபிடித்து நிறைவேற்றினார்கள். எதிர்த்தார்கள். அதனால் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாறு தெரிந்திருந்தாலும் இப்போது பாரதீய ஜனதாவின் தொலை நோக்குப் பத்திரம் அதனைத் திரும்பக் கொண்டுவருவோம் என்கிறது. அப்போது ஞாநியின் தீம்தரிகிடவில் எழுதிய கட்டுரை இது: அதன் தலைப்பு: அந்தமுறை நானும்....

கவிதை தினத்தில்...

படம்
கவிதைகள் தினத்தையொட்டி நேற்று மனுஷ்யபுத்திரன் தனது வருத்தமான பதிவை எழுதியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் -2018 ,உலகக் கவிதை நாளையொட்டி 30 கவிதைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தேன் என்பதை முகநூல் நினைவூட்டியது. அதல்லாமல் வெவ்வேறு ஆண்டுகளில் கவிதை தினத்தில் கவிதைகளைப் பதிவேற்ற்றம் செய்துள்ளேன். நாற்பது கவிகள் இக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியாகப் பேசும் கவிதைகள்.

திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்

”தமிழர்களை வளர்ச்சி அடையச் செய்து தமிழ் வளர்ப்போம்” - இந்த வழிமுறையை தி.மு.க. நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. அதன் ஆட்சியில் திராவிட/ தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட்டார்கள். கல்வித்தந்தைகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள். சேவைப்பிரிவு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற உற்பத்தி சாரா தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பன்னாட்டு மூலதனக்குழுமங்களோடு போட்டிப் போடவும் தயாராக உள்ளனர். இந்த நகர்வு ஒவ்வொன்றிலும் தமிழ் மொழியாகவும், கலையாகவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகக் குறைவு. தமிழ்த்தேசிய தனியார் நிறுவனங்களின் பண்பாட்டுப் பங்களிப்பு எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

ஒளி ஓவியர் செ.ரவீந்திரன்

படம்
  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணை வேந்தர் பேரா. ஆ.ஞானம் சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்பவர் பேரா.செ.ரவீந்திரன். இடம் புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அடுத்துள்ள லே ப்ரான்சே திறந்த வெளி அரங்கம். அந்தப் படத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதிக்கு முகம் காட்டிப் பார்வையாளர்களுக்கு முகம் தெரியாமல் நிற்பது நான். தேதி நினைவில் இல்லை. ஆண்டு 1991 ஆண்டாக இருக்கலாம்.

ஈழத்தமிழ் இலக்கியம்: எழுதப்பட்டனவும் எழுதப்படுவனவும்

படம்
பேராசிரியர் அ. ராமசாமி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். தொடர்ச்சியாக ஈழ இலக்கிய புத்தகங்களை வாசித்து அது பற்றி எழுதிவருபவர்.அவருடனான மின்னஞ்சல் வழியான நேர்காணல் இது நேர்காணல் செய்து அகழ் இதழில் வெளியிட்டபோது நேர்காணலுக்குத் தந்த தலைப்பு:   வெற்று இரக்கத்தைப் பெறக்கூடிய எழுத்துகள் அலுப்பானவை:

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தன.