இடுகைகள்

அரசியல் தெரிவுகளின் அவலங்கள்

நல்லன நடக்கவேண்டும் என நினைக்கும் நினைப்புக்குள்ளேயே தீயனவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு

படம்
  மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல - பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

இலக்கியவரலாற்றை எழுதும் முயற்சிகள்

பதிற்றாண்டுத்தடங்கள் (2010 -2020) என்றொரு சிறப்புப்பகுதிக்காக நான்கு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது காலச்சுவடு. அதன் 250 வது இதழ் என்பதும் சிறப்புப்பகுதிக்கு ஒரு காரணம்.

மனு : சில சொல்லாடல்கள்

வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் இருப்பதில் மாற்றம் தேவையில்லை என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.

புதிய உரையாசிரியர்கள்

படம்
  அரசியல் விமரிசகர் துரைசாமி ரவீந்திரனின் முந்தையை விவாதங்களுக்கும் இப்போதைய விவாதங்களுக்கும் நேர்காணல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முன்பெல்லாம் பூடகமாகச் சொன்ன கருத்துகளை இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார். மாநில அரசியலில் நடக்கும் நகர்வுகளைக் குறிப்பாகத் தமிழக பா.ஜ;க.வின் அரசியல் நகர்வுகள் பலவற்றை வெளிப்படையாகப் பேசுகிறது அண்மைய பேச்சுகள்.

எட்டு நூறுகள் - விளையாட்டும் சினிமாவும்

படம்
  நையாண்டியாக முடிந்த தன்வரலாற்றுப்புனைவு ========================================= எந்தவொரு தன்வரலாற்றுப் புனைவும் அதன் எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. அரசியல் தலைவர்களின் தன்வரலாறுகள் - காந்தி, மண்டேலா, சே, அம்பேத்கர் - அரசியல் பேசுவதற்காகவே எடுக்கப்பட்ட படங்கள். இவர்கள் அல்லாமல் வேறு துறையின் ஆளுமைகளைப் பற்றிய தன்வரலாற்றுப் புனைவுச் சினிமாக்களும் அரசியல் நோக்கத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களைப் பற்றிய தன்வரலாற்றுப் புனைவுகளும் விதிவிலக்கில்லை. 800 பற்றிய பேச்சுகளும் ஆவேசங்களும் நடந்து கொண்டிருந்தபோது இதற்கு முன்னால் பார்த்த அமீர்கானின் தங்கல்/ யுத்தம், எம்.எஸ்.தோனி , மேரிகோம் போன்ற தன்வரலாற்றுப் புனைவுகளும் இறுதிச்சுற்று, கனா போன்ற விளையாட்டுப் புனைவுகளும் நினைவில் ஓடிக்கொண்டே இருந்தன.