எட்டுப்பட்டிகளும் பதினெட்டுப்பட்டிகளும்
சில எண்கள் சார்ந்து சில மரபுத்தொடர்கள் உருவாகியிருக்கின்றன; சில நம்பிக்கைகளும் உள்ளன. மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது முதலான எண்களோடு கடவுள்களுக்குத் தொடர்புகள் உண்டு. மும்மூர்த்திகள், ஆறுமுகன், நமசிவாய நமஹ என்னும் எட்டெழுத்து, நமோ நாராயணாய நமஹ என்னும் ஒன்பது எழுத்து போன்றன கடவுள்களின் அடையாளங்கள். பெருமாள் என்னும் நாராயணனோடு ஒன்பது எழுத்து தொடர்பில் இருக்க, நெல்லைக்குப் பக்கத்தில் தாமிரபரணிப்படுகையில் பெருமாள் இருக்கிறார். அவரது கோயிலுக்குப் பெயர் எட்டெழுத்துப் பெருமாள் கோயில்.