நிறுத்தப்படுவதும் திரும்பவும் வருவதும் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் அடையாளங்களில் ஒன்று. 1990 களின் இறுதியில் தொடங்கி , தான் நடத் திய தலித் - இதழைத் திரும்பவும் கொண்டுவருகிறார் பன்முகத்தன்மைகொண்ட எழுத்தாளர் ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) . உள்ளடக்க நிலையில் முன்னர் வந்த 12 இதழ்களின் நீட்சி யைக் காணமுடிகிறது. இந்த இதழின் உள்ளடக்கம்: · கவிதைகள் (எம்.எ.நுஃமான், என்.டி.ராஜ்குமார் · சிறுகதைகள் (ரவிக்குமார், அழகிய பெரியவன், ப்ரதீபா ஜெயச்சந்திரன்) · மொழிபெயர்ப்புகள் (கெவின் பி.ஆண்டர்சன்: நேர்காணல் தமிழில் சிசுபாலன், லீலாதர் மண்டலே கவிதைகள், தமிழில்:கிருஷாங்கினி) · கட்டுரைகள் (ஜெ.பாலசுப்பிரமணியம், கோ.ரகுபதி) · வெளிவராத நூலின் பகுதி (தேன்மொழியின் சாமி தந்தாள் கதை)