இடுகைகள்

காணிநிலம் என்னும் எழுத்தாளர் கிராமம்

படம்
நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை( 10/02/2020) நிறைவடையும். இந்தத் திருவிழாவின் சிறப்புநிலையாக ஒவ்வொரு நாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பியபின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்குகிறார்.ஒவ்வொருநாளும் இது நடந்துகொண்டிருக்கிறது.

நிகழ்வுகள் - நபர்கள்- நீதிகள்

மதுவும் மரணங்களும் மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நாற்பது நாள் இடைவெளிக்குப் பிறகு நீக்கப்பட்ட தடையின் வேகம், காட்டாற்று வெள்ளமாய்ப் பாய்ந்தது. குடியின் விளைவுகள் - தனிமனிதர்கள் மற்றும் சமூகநிலையில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியாமல் நடப்பதல்ல குடிப்பழக்கம். அறிந்தே நடக்கும் ஒன்றை நிறுத்துவதற்குச் சட்டங்கள் எவ்வளவுதூரம் உதவும் என்பது கேள்விக்குறி. அதேபோல் பாவங்கள் எனச் சுட்டும் சமயநீதிகளும் வெற்றிபெற்றதாகப் புள்ளிவிவரங்கள் இல்லை. நீதிநூல்களும் சமயநம்பிக்கைகளும் பன்னெடுங்காலமாகப் பட்டியலிடப்பட்ட குற்றங்களை மனிதர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். மீறலில் இருக்கும் கொண்டாட்ட மனநிலையோடு குற்றங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். இன்று திரும்பவும் மதுக்கூட விற்பனைகள் நிறுத்தப்படலாம். நீதிமன்றத்தின் இந்த இடையீடு மிகக் குறுகியகாலத் தடைதான். திரும்பவும் அணை திறக்கும்போது பெரும் சுழிப்புடன் ஓடும்

நாடகவியல் பேராசான் மௌனகுரு

படம்
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அவரது வாழ்க்கைக்குறிப்பு விவரங்களையும் அரங்கவியலில் அவரது செயல்பாடுகளையும் கொண்ட விவரப்பட்டியல் ஒன்றை அனுப்பித்தரமுடியுமா? என்று கேட்டு இணையவழிக்கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

தெய்வீகனின் மூன்று கதைகள்

புலம்பெயர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க கதைகளை எழுதிவரும் ப.தெய்வீகன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது கதைகள் குறித்த பதிவுகள் இங்கே

முடிவிலிகளில் அலைபவர்களின் கவி அடையாளம்

தனியன்களின் தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கிறார்கள். வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லமு டியும். ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதன்மீது அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதால், மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வார்கள்.

கனலியில் மூன்று சிறுகதைகள்

அண்மையில் பதிவேற்றம் பெற்றுள்ள கனலி -இணைய இதழில் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் கனலியில் புதிதாக எழுதப்பெற்ற கதைகளோடு புதையல் என ஏற்கெனவே வேறுவடிவில் வந்த ஒரு கதையைப் பெட்டகம் எனத் தலைப்பிட்டு வெளியிடுகிறார்கள். இந்த இதழ்ப் பெட்டகமாக வந்துள்ள கதை சு.வேணுகோபாலின் பூமாரியின் இன்றைய பொழுது.இந்தக் கனலிக்காகப் பெறப்பட்டுப் பதிவேற்றவை  பெருமாள் முருகனின் முத்தம்  இரா.கோபாலகிருஷ்ணனின் யோகம்  இரா முருகனின் ஒற்றைப்பயணி வரும் ரயில் நிலையம்.