இடுகைகள்

அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……

படம்
· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து  உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….?  இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை (Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.

சேரனும் தங்கரும்: ஆண் மைய சினிமாக்காரா்கள்

படம்
சொல்லமறந்த கதை – நாவலாசிரியா் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்களின் திரைப்பட வடிவம். திரைப்பட வடிவமாக்கி நெறியாள்கை செய்ததுடன் ஒளி ஓவியம் செய்தவர் தங்கா்பச்சான். தங்கா்பச்சான், ஒளிப்பதிவுத் தொழில் நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்து, தனது சிறுகதையான கல்வெட்டை, “அழகி” என்னும் படமாக இயக்கி நெறியாள்கை செய்து அதன் மூலம் தனது திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என அடையாளம் காட்டியவா். தனது சினிமா, வியாபார வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருக்காது; வாழ்க்கையினூடான பயணமாக இருக்கும் எனப் பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டவா். அவா் எடுத்த சொல்லமறந்த கதையும் அதிலிருந்து விலகிவிடவில்லை. இப்பொழுது அவா் நெறியாள்கை செய்த மூன்றாவது படமான “தென்றல்“ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.

மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்

படம்
மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம். 

தமிழ் இலக்கிய விமர்சகர்கள்: இற்றைப்படுத்துதல்

படம்
1979 இல் சுவடு இதழ் தனது நான்காவது இதழை விமரிசனச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

தேர்வின் மொழி

  அண்மையில் தென்மாவட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகத்திற்கெதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் . தொடக்க நிலையில் தங்கள் கல்லூரிகளின் வாசல்களில் ஆரம்பித்த போராட்டம் உடனடியாகப் பல்கலைக்கழக வாசலை நோக்கித் திரும்பியது . மொத்தமாகத் திரண்டுபோய்ப் பல்கலைக்கழக வாசலை முற்றுகையிட்டார்கள் . வழக்கம்போல பல்கலைக்கழக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது . ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை .

எஸ். ஜே. சூா்யா :தீராத விளையாட்டுப்பிள்ளை

படம்
தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அதன் பார்வையாளா்களிடம் விளம்பரங்கள் கொண்டுபோய்ச் சோ்க்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் விளம்பரத்திற்கும் பணத்தைச் செலவிடுகின்றன. படம் எப்படிப்பட்டது என்பதைப் பார்வையாளா்களுக்குக் கோடி காட்டி அறிமுகப்படுத்தும் விதம் அந்த விளம்பரங்களில் வெளிப்படும். அவற்றைப் பார்க்கும் பார்வையாளா்கள் அந்தப் படம் தாங்கள் பார்க்க வேண்டிய படம்தானா? என்று முடிவுசெய்து கொண்டு திரையரங்குகளுக்குச் செல்வார்கள்.