இடுகைகள்

பணமதிப்பிழப்புக்காலக் குறிப்புகள்

படம்
9/11/2016 நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணம். தொலைக்காட்சி பார்க்கவில்லை. தேசத்தின் வேகமான மாற்றம் எனக்குத் தெரியாது. நேற்றும் முந்தியநாளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன். ரூ. 8722/- கொடுத்தார்கள். கைவசம் வைத்திருந்த நான்கு ரூ.500/- தாள்களோடு மொத்தம் 10722/_ இருந்தது நேற்று மாலை. 21 ஐந்நூறு ரூபாய்த் தாள்களும் இரண்டு நூறு ரூபாயும் சில்லரையும்.. ரூ.90/- இரவு உணவுக்குக்காலி. ஒரு 500 ரூபாளைத் தாளைக் கொடுத்து மாற்றியிருக்கலாம். மாற்றவில்லை. நள்ளிரவில் நடக்க இருந்த மாற்றத்தை உள்ளுணர்வு சொல்லவில்லை. ரயிலைவிட்டு இறங்கி ரயிலடியிலிருந்து ஆட்டோவில் செல்லமுடியாது. தரவேண்டிய பணம் 170/-  இப்போது இருப்பது 132/-தான். நடைதான் ஒரே வழி. பிறகு பேருந்து. பின்னொரு நடை. ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகும் வீடு போய்ச்சேர. தேசநலனுக்காகச் சகித்துக் கொள்ளவேண்டும். முதல் சகிப்பு. பாதிப்பில்லை.  கையெழுத்துப்போட்டுச் சம்பளம் வாங்குவதால் வரியும் கட்டியிருக்கிறேன்.  அதனால் பாதிப்பில்லை. சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து சில நாட்களுக்குச் சிக்கல்கள் தான். அடுத்தடுத்தும் வரும். கடந்துதான் ஆகவேண்டும். சகிக்க வேண்டும். சகித்

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே

சித்திரிப்பின் பின்னணிகள் ஹரியின் படங்களை முன் வைத்து

சில வருடங்களுக்கு முன்பு ’காதல்கோட்டை’ என்ற படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரில் ’காதல்’ இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகம் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. கடைசியில் ’காதல்’ என்றே ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தயாரிப்பாளா்களும் இயக்குநா்களும் எப்பொழுதும் மந்தைத் தனத்தின் மீது பற்றுக் கொண்டவா்கள். இரண்டெழுத்துப் படம் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்களுக்கெல்லாம் இரண்டெழுத்தில் பெயா் வைப்பார்கள். ’சாமி’ யில் தொடங்கிய இந்தப் போக்கு ’மஜா’, ’ஆறு’, ’ஆதி’ என்று நீண்டுகொண்டிருக்கிறது. ஊரின் பெயரால் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்கள் எல்லாம் ஊா்களின் பெயா்களில் வைக்கப்படும். ’மதுர’, ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று அதுவும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.

தமிழ் சினிமா: காட்டப்படுவதும் சொல்லப்படுவதும்

ஷங்கரின் “பாய்ஸ்“ திரைப்படம் திரைக்கு வந்த வேகத்தில் வேகமாகத் திரும்பிவிட்டது அவருடைய முந்தைய படங்களைப் போல வணிக வெற்றியைப் பெறவில்லை. அப்படித் தோற்றுப் போனதில் பின்னணியில் அப்படம் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு எந்த அளவு பங்கு இருந்தது என்பது பற்றி யாரும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன என்பது உண்மை.

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.