இடுகைகள்

நவீன நாடகங்கள்: மேடையேற்றப் பிரச்சினைகள்

படம்
உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்று விட்டனவும்,பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்; பழைமைக்கு நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில் கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..?              நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம் பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும்   பொருந்தக்கூடியதே.

அரங்கியல் அறிவோம்: நாடகத்தின் வடிவம்

நாடகத்தின் வடிவம் பற்றிப் பேசப்போனால் அதன் அடிப்படையான குணாம்சம் என்ன என்ற கேள்வி எழும். நாடகத்தின் அடிப்படையான குணாம்சம் முரண்( conflict) தானே.             முரண்தான் அடிப்படையான குணாம்சம். வெவ்வேறு தளங்களில் - வெளிப்படையாகவோ, வெளித்தெரியாமலோ- முரண் அமைகின்றபொழுது நாடகம் வடிவம் கொள்கிறது.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு ? மரணங்களைத் திட்டமிடவோ , தள்ளிப்போடவோ முயன்ற முயற்சி களுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.

தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

படம்
பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.

மா.அரங்கநாதனை நினைத்துக்கொண்ட போது

படம்
பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் (1989 -97) அடிக்கடி சென்னை போவதுண்டு. போகும்போது திரும்பத் திரும்பப் போன இடம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ புத்தகக் கடை. நாடகம் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என்பதோடு முன்றிலுக்குப் போய் வருவதும் முதன்மையான வேலையாக இருந்தது. சென்னை போவதற்கு முன்பே முன்றிலின் வாசகனாக இருந்த நான் மா. அரங்கநாதனை நேரில் பார்த்தது தி.ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் அலுவலகத்தில்தான். முன்றில் போய் அரட்டை அடிப்பது போலவே ரங்கநாதன் தெருவில் நடப்பதும் சுவாரசியமானது. சித்திரைத் திருவிழாவில் எதிர் சேவையில் நடக்கும் மனநிலையைத் தரும் நடை.

ஆய்வுத்தலைப்பைத் தேடியொரு பயணம்- சில குறிப்புகள்.

முன்னுரை: பல்கலைக்கழகப்பட்டங்களுக்கான கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்த நிலையில் முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும் ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன. இத்தேவைகளின் பெருக்கம் தமிழாய்வு என்னும் மரத்தின் இருபெரும் கிளைகளாக இருந்த மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் எப்படி விரிவாக்குவது என்ற கேள்விக்குள் நகர்த்தின. இந்நகர்தலின் பின்னணியிலும் மேற்கத்தியக் கற்கைமுறைகளும் சிந்தனைப்பள்ளிகளுமே செயல்பட்டன. மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவை தந்த புதிய கருத்தியல்கள், சார்புபாடங்களையும், துணைப்பாடங்களையும் உருவாக்கித் தந்தன. புதிதுபுதிதாகக் கண்டறியப்ப