இடுகைகள்

தமிழ் சினிமா: தமிழ் பத்திரிகைகள் தமிழ் உயிரியின் கனவுலகக் கட்டமைவுகள்

இயக்குநா் ஷங்கரின் “ஜீன்ஸ்“ வெளியிடப்பட்டு எல்லா ஊா்களிலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. படம் வெளியாகிப் பத்து நாட்களுக்குப் பின் நண்பா் ஒருவரிடம் “ஜீன்ஸ் பார்த்தாச்சா? என்று கேட்டேன். “படம் புட்டுக்கும் போல இருக்கே; பத்திரிகைகயெல்லாம் சரியா எழுதலியே?“ என்று சொன்னவா். “கதை வேணும்; கதையில் மெஸேஜ் இருக்கணும்; பாட்டுகளை மட்டும் நம்பிப் படம் எடுத்தா லாலா கடைக்கே அல்வாதான்“ என்று அடித்துப் பேசினார். நண்பா் படம் பாரத்து விட்டார் என்று நினைத்தேன். ஆனால், தொடா்ந்து பேசும் போது ஷங்கரோட “சோஷியல் டச் படத்தில் இல்லைன்னாலும், நாசரும் ராதிகாவும் பின்னயிருக்காங்களாம் அதுக்கும் மேல் 50 கிலோ, தாஜ்மகால் வேற…. ஒரு தடவை படத்த பார்த்திட வேண்டியதுதான்“ என்றார் இப்பொழுது அவா் படத்தைப் பார்க்கவில்லை என்பது உறுதியாயிற்று.

சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.

படம்
பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியை த் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது ; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

படம்
இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை.   மரபான   முறையில்   செய்யுளை   அர்த்தப்படுத்துவதற்காகத்   தேடிக்   கண்ட்டையும்   அருஞ்சொல்   எதுவும்  இக்கவிதையில்    இல்லை .  அப்படி   இருந்தால்   அதன்   பொருளைச்   சொல்வதன்   மூலம்   கவிதையை   அர்த்தப்படுத்தலாம் . அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்

தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்

படம்
தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது : கைவீசி நடக்கிறது காலம். அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய் மனித வாழ்க்கை- ஒட்டுவதும் உதிர்வதுமாய். காலத்தை முந்திப் பாய்கின்றன கனவுக்குதிரைகள். காலடி பிசகாமல் நீள்கிறது காலப்பயணம். வேறெதையும் கண்ணுற்று நிற்பதுமில்லை கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை. காலம் நடக்கிறது.

பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை

படம்
ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை.

எல்லாம் தெரிந்த அம்மா

படம்
இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே . முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன் . அந்தக் கதைகளின் தொடக்கமோ , நகர்வோ , நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன் .