இடுகைகள்

ஆலயமு மண்டபமு மன்னசத்ர சாலையும்

[முன்குறிப்பு: முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம். விலையில்லா..., குறைந்த விலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்] நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. கி.பி. 15 தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த விசயநகர, நாயக்க அரசர்களின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றாகவே இவை கூறப்படுகின்றன. (அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு, ப.266) இக்கட்டுரை அத்தகைய சத்திரங்களின் நிறுவன வடிவையும், சமூகத்தேவையையும், மக்கள் எதிர்கொண்ட நிலைகளையும் காண முயல்கிறது. சத்திரத்தின் நிறுவன வடிவம். சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும், அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. தர்மகாரியமாக அன்னதான ம

அடிப்படைவாதத்திற்கெதிரான அரசியல்

படம்
அந்த நிறுவனங்களெல்லாம் பெருங்கனவொன்றின் தொகுதிகள். பிரிட்டானியர்களிடமிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும்; எதிர்கால இந்தியர்கள் இவ்வுலகத்தோடு எவ்வாறெல்லாம் உறவு கொள்ளவேண்டும் என்பதற்கான வரையறைகளை உருவாக்கித் தந்த திட்டக்குழுவின் பரிந்துரைகளின்பேரில் முதல் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளியிடப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டகாலத்திலும் பெருங்கோலங்களாக - வண்ணவண்ணக் கோலங்களாக ஆன நிறுவனங்கள் அவை.

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் : 1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் வெளிப்பட்டன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த உள்வாங்கும் மக்களாட்சிமுறை, நகர்மயமாதல், கிராமசமூகத்திற்குள் நவீனத்துவத்தின் நுழைவு என அந்த வெளிப்பாடுகளைப் பட்டியலிடலாம். இவைகளும் இவைபோன்ற அரசியல், பொருளியல் திட்டங்களும் முற்றிலும் நேர்மறையானவையென்றோ, எதிர்மறையானவையென்றோ அறிவுலகம் நினைக்கவில்லை. இவைகளின்மீது விமரிசனங்களை நேரடியாக வைத்தவர்கள் அக்காலத்தில் இருக்கவே செய்தனர். படைப்புத்தளங்களில் செயல்படுபவர்கள் அவரவர் படைப்புவடிவத்திற்கேற்ப விமரிசனத்தை வைக்கத்தயங்கவில்லை. விரிவான விமரிசனங்களுக்கும் பதிவுகளுக்கும் வாய்ப்புகொண்ட நாவல் வடிவம் அறுபதுகளில் நடந்த மாற்றத்தைக் கவனமாக உள்வாங்கி வெளிப்படுத்தியது. புராணத்தன்மை, வரலாற்றுப் புனைவு,குடும்ப வெளி என அதுவரை

தமிழ் மரபிலிருந்து விமரிசனப்பார்வையை உருவாக்கவேண்டும்

படம்
யோகி: தமிழ் இலக்கிய ச் சூழலில் இலக்கியத்தின்அடைவு நிலையை, தமிழ்நாட்டு இலக்கியம்தான் முடிவுசெய்கிறது. இப்படியிருக்கையில் புலம்பெயர் இலக்கியத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?மலேசியா-சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் உங்கள் அபிப்பிராயம் என்ன?

உலகப்பார்வையாளர்களுக்கான தமிழ் அரங்கநிகழ்வு: சக்திக்கூத்து:

படம்
‘எதிர்பார்ப்பு’ என்ற சொல்லையும் ‘முன்முடிவு’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாக நினைப்பதில்லை. "எந்தவித எதிர்பார்ப்புகளு மற்று ஒரு கலைப்படைப்பிற்குள் நுழையவேண்டும்; கலைநிகழ்வைக் காணவேண்டும்” என்று சொல்லப்படும்போதெல்லாம் அது சாத்தியமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். எழுத்துசார்ந்த படைப்பாயினும்சரி, அரங்கநிகழ்வாக இருந்தாலும்சரி வாசகர் அல்லது பார்வையாளர் என்பவர் சில எதிர்பார்ப்புகளோடுதான் நுழைகின்றார். நான் ப்ரசன்னா ராமசுவாமியின் சக்திக்கூத்தைக் காணச் சில எதிர்பார்ப்புகளோடு தான் நுழைந்தேன். என்னைப்போலவே பார்வையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக் கூடும்.

இச்சையைத் தவிர்க்கும் புனிதப் பசுக்கள் :எஸ்.செந்தில்குமாரின் புத்தன் சொல்லாத பதில்.

படம்
ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று கதைகள். காலச்சுவடில் ஒரு கதை. உயிர்மையில் ஒரு கதை. பழைய ஆனந்தவிகடனின் சாயலைத் தொடரும் ஜன்னலில் ஒரு கதை என மூன்றுகதைகள் ஓர் எழுத்தாளருக்கு அச்சாவது அவருக்கும் ஆச்சரியமாகவே இருந்திருக்கும்.