இடுகைகள்

பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்

படம்
எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ” இது குறித்து தங்கள் எண்ணம்   என்ன ? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012   பாஸ்டன் பாலா ! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்:   ” நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. ’ பக்தர்களின் ” நம்பிக்கைக்கும் , ” பாட்டாளி மக்களின் ” ” தார்மீகக் கோபத்திற்கும் ,   ஆதிக்கக் குழுமங்களின் ” கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

தீர்ப்பளிக்கப்படாத வழக்கு

[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] THE JUDGEMENT RESERVED  THE PLAY READING BY  A.RAMASAMY  காட்சி ;1 நாடகம் தொடங்கும்போது முன் மேடையில் ஒரு நபர் சுழல் நாற்காலியில் அமர்ந்துள்ளான். தலையில் கௌபாய் தொப்பி. கையில் ஒன்றரை அடி நீள உருட்டுக்கோல். இருபுறமும் உலோகப் பூண் . அவன் நாடகத்தின் இயக்குநராகக் கருதுபவன்.பெர்முடாஸ் , பேன்ஸி பனியன் என வித்தியாசமான ஆடைகள் அணிந்துள்ளான். அவனுக்கு முன் உயரம் குறைந்த மேசை உள்ளது . அதில் நாடகப்பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவன் பார்வையாளர் களுக்கு முதுகு காட்டி அமர்ந்துள்ளான். பின் மேடை இருட்டாக உள்ளது. பகலில் நடப்பது என்றால் திரையிட்டு மூடி இருக்கலாம். திரைக்குப் பின் ஒரு நீதிமன்றத்தின் மிகக் குறைந்த வடிவம் இருக்க வேண்டும். சுழல் நாற்காலியையும் கையில் உள்ள கோலையும் சுழற்றியபடி திரும்பிய

திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :

படம்
எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை; இனம், இன உணர்வு உள்பட என்று  நான் சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை என்கிறார்கள். இப்போது கண்ணகி சில தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், எப்படி? அவள் கற்புக்கரசி. கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்டபோது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம். கண்ணகியை நவீனப் பெண் தனது அடையாளமாக ஏற்க மாட்டாள் என்று நான் சொன்னபோது ஒரு எழுத்தாள நண்பர் சொன்னார். ‘ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது உங்களுக்கு’

வாவெல் கோட்டை: இரண்டாவது உலக அதிசயம்.

படம்
நாற்பது வயதுக்கு மேற்பட்ட போலந்துக்காரர்களின் மனதில் வார்சாவை விட க்ராக்கோவின் பெருமைகளும் காட்சிகளும் நிரம்பி வழிவதை அவர்களிடம் பேசும்போது உணரலாம். போலந்தின் வரலாறு, பண்பாடு, நிலவியல் அறிந்த நிகழ்காலத்து இளம்பெண்களும் பையன்களும் கூட க்ரோக்கோவைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவதைப் பார்த்திருக்கிறேன். என்னிடம் பயிலும் மாணவிகள் போலந்தில் பார்க்க வேண்டிய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை அந்த நகரத்திற்கே வழங்கினார்கள். முன்பு க்ராக்கோ தலைநகராக இருந்துள்ளது என்பதோடு இப்போதும் அந்நகரம் போலந்து நாட்டின் பண்பாட்டு நகரமாகக் கருதப்படுகிறது.

கூட்டம்.. கூட்டமான கூட்டம்

படம்
தமிழகம் முழுவதும் சா திவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் சமூக , பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முதல் , வீடு வீடாக சென்று மக்களின் சமூக , பொருளாதார , ஜாதிவாரியாக தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர்.

மாம்பழக்கன்னங்கள்; மது ஊறும் கிண்ணங்கள்.

படம்
அக்கினி நட்சத்திரத்திற்கும் மாம்பழ சீசனுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அக்கினி  வெயில் தான் மாங்காயைப் பொன்னிற மாக்கிப் பழுக்க வைக்கிறது என நினைத்துக் கொள்வேன். அக்கினி முடிந்தவுடன் வாங்க ஆரம்பித்தால் சீசன் முடியும் வரை மாம்பழ வாசம் வீட்டில் கமகமத்துக் கொண்டுதான் இருக்கும். வார்சாவில் இருக்கப் போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் மாம்பழ மணம் இல்லாமல் கழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.