இடுகைகள்

பெரியாரே! பெரியாரே!! அப்பாவிகள் இவர்கள். அறியாமல் செய்கிறார்கள்

படம்
தமிழ்நாட்டின் பொதுமனிதர்கள் ஞான .ராஜசேகரனை எவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதற்குத் துல்லியமான புள்ளி விவர ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியியல் அதிகாரியாகப் பணி செய்யும் அவரின் தொடக்க அறிமுகம் நவீன நாடகங்கள். இன்று நவீன நாடகங்களில் செயல்படும் பலரும் கூட அவரை நாடக்காரராக அறிவார்களா? என்பது சந்தேகம்தான். நவீனத்துவ மனநிலை என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவராக எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப்பட்டவர் ராஜசேகரன்.

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

படம்
ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.

பனியும் பனியின் நிமித்தமும்

படம்
”கதவைத் திற; காற்று வரட்டும்” நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?

படம்
தேர்வுகள் என்ன உணர்வைத் தருகின்றன என்பது சந்திக்கின்றவர்களைப் பொறுத்தது. இந்திய மாணவர்களுக்குப் பல நேரங்களில் பயமுறுத்துவனவாக இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய மாணவர்கள் அதை எதிர்பார்ப்புடன் - ஆர்வமூட்டும் ஒன்றாக - பார்க்கிறார்கள் என்பது எனது அனுபவம். இந்தியாவில் மாணவர்கள் தேர்வைத் தங்களுக் குரியதாகக் கருதி எப்படிப் பதில் எழுதுவது என்ற கோணத்தில் சிந்திக்கிறார்கள்; தயார் செய்கிறார்கள். ஐரோப்பிய மாணவர்கள் தேர்வு நடத்துவது ஆசிரியரின் வேலை என எடுத்துக் கொண்டு எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் எனச் சிந்தித்துத் தயாராக இருக்கிறார்கள்.

ஒரு விருது: பாராட்டு விழா

படம்
தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய நூல்களை அச்சிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பீர்களா? இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். இப்படியொரு பாராட்டு விழா ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்தின் போக்கிற்காகக் கவலைப்படுகிறேன்.