உலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் மிருகவிதூஷகம்
பாண்டிச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் கற்றுத் தேர்ந்த பின் தங்களுக்கான தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து நாடகக்காரர்களாகவே வலம் வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் முருகபூபதி என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்கலைப் பள்ளியின் தேர்வுக்கான தயாரிப்புகளின் போதே உரையாடலை அதிகம் சார்ந்திருக்காமல் தனியுரையை அதிகம் சார்ந்த- மனவெளிக்குள் பயணம் செய்யும் நாடகப் பிரதிகளைத் தேர்வு செய்து மேடையேற்றியவர் அவர்.