வினையும் எதிர்வினையும் : சோ.தர்மனின் சிதைவுகள்
நான்கு வழிச்சாலைகளின் திறப்புக்குப் பின் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் பேருந்துப் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து விட்டது என்பதில் அந்த நண்பருக்கு ஏகப்பட்ட சந்தோசம். தனது வேலை காரணமாக வாரத்திற்கு மூன்று முறை மதுரைக்குப் போய்வருபவர் அவர். இடைநில்லாப் பேருந்துகள் மூன்றரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றன என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார்.