இடுகைகள்

வாழ்ந்து கெட்டவர்கள் : பா.செயப்பிரகாசத்தின் அம்பலகாரர் வீடு

கடந்த ஒரு மாதமாக அந்த நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தாலும் சரி,அவரிடம் பேச வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலும் சரி என்னைக் கொஞ்சம் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இணைப்புக் கிடைத்தவுடன் அவர் வழக்கமாகச் சொல்லும், ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘சாமியே சரணம்’ என்று சொல்கிறார். அவர் சொல்கிற அந்த வார்த்தைகளை நானும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார். இப்படி எதிர்பார்ப்பது இவர் மட்டுமல்ல. தமிழ் நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ‘ஐயப்பன் பக்தி’ பண்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்.

அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது

ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

பின் தொடரும் அச்சம் :கிருஷ்ணன் நம்பியின் மாமியார் வாக்கு

பொதுவாக மக்களும், ஊடகக்காரர்களும் பொதுத்தேர்தல்களையே தேசத்தின் அரசியல் நடவடிக்கையாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொதுத்தேர்தல் என்ற சொற்சேர்க்கையின் அர்த்தமே மாறிப்போய்விட்டது. 

வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்

அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

படம்
இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.