இடுகைகள்

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்

ரவி என்ற இளம் நடிகர் நடித்த முதல் படத்தின் பெயர் ஜெயம் . இச்சொல் வெற்றி என்ற பொருள் தரும் ஒரு வடமொழிச் சொல்.அப்படம் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததால் தனது பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டுவிட்டார் ரவி. இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் பெயர் something something எனக்கும் உனக்கும் . இத்தலைப்பில் இருந்த ஆங்கில எழுத்துக்களைப் பின்னர் சம்திங் சம்திங் எனத் தமிழ் எழுத்துக்களாக மாற்றி அச்சிட்டனர். இப்பொழுது ஆங்கிலத்தில் இருந்த something something என்பதும் இல்லை . தமிழில் எழுதப்பட்ட சம்திங் சம்திங் என்ற இரட்டைக் கிளவியும் இல்லை .

எல்லாம் விலை குறித்தனவே ; ஆன்மாவும் கூட .

படம்
வரலாறு என்னை விடுதலை செய்யும் - புரட்சியின் வழியாகக் கியூபா நாட்டின் அதிபராகி, நீண்ட நாட்கள் அப்பதவியில் இருந்த    பிடல் காஸ்றோ சொன்ன புகழ் பெற்ற வாசகம் இது.  

விளம்பரத்தூதர்களின் முகங்கள்.

படம்
பள்ளிக் கூட வாகனத்தில் கண்ணயர்ந்தபடி அசைந்து அசைந்து செல்லும் அந்தச் சின்னப் பெண்ணைக் காட்டும் அந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் தினந்தோறும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் இருபதுக்கு /20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பாருங்கள்.

மொழித்துறைகள் காப்பாற்றப்படும்.

அரசுக் கல்லூரிகளில் முறைப்படியான நடைமுறைகளப் பின்பற்றி ஆசிரியர் களை நியமனம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியம், தனியார் கல்லூரிகளில் அந்த முறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்துவதில்லை என்ற குறைபாடு அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை என்ற போதிலும் வேறொன்றைப் பற்றிச் சிந்தித்துப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடரும் வட்டார தேசியம்

அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும்¢, மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. 

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்

இலங்கைத் தமிழர்களின் இருபத்தைந்தாண்டுக் காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள். உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லி விட மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பம் தான். எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்கிறது.