இடுகைகள்

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்

இலங்கைத் தமிழர்களின் இருபத்தைந்தாண்டுக் காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள். உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லி விட மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பம் தான். எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்கிறது.

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

படம்
மாணவர்களுக்கு உரைநடைகளின் மாதிரிகளைக் காட்டுவதற்காகப் பலரின் உரைநடைகளைத் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில பெயர்களைக் குறித்து வைத்துத் தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் பெயர்ப்பட்டியலில் சுஜாதாவின் பெயரும் இருந்ததால் அவரது கட்டுரைக்காகப் பழைய கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அந்தக் குறுஞ்செய்தி வந்தது. அப்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். எனது கைபேசியின் திரையில் தெரிந்த அந்தச் செய்தி எழுத்தாளர் சுஜாதா இறந்து விட்டார் என்று காட்டியது. அதைப் பார்த்த பின்பு எனது தேடல் நின்று போய்விட்டது.

வெண்ணெயும் சுண்ணாம்பும்

தொழில் நுட்பத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களும் அறிவார்ந்த மனித உற்பத்தியும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு அடிப்படையான தேவைகள். இத்தேவைகளைத் தீர்க்கும் சக்தி உடையவை உயர்கல்வி நிறுவனங்கள் தான். தாராளமயப் பொருளாதாரத்தை முன்மொழியும் - உலகமயத்தைத் தீர்மானிக்கும்- உலக வங்கியும் மேற்கத்திய நாடுகளும் பின்னின்று இயக்க, நமது அறிஞர்களும் வல்லுநர்களும் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவித்துள்ளதே அதற்குச் சான்று. 

பரபரப்பின் விளைவுகள்

வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒருவிதத்தில் சமூகப் பொறுப்பு என்பதும், அரசியல் நோக்கம் என்பதும் பெருங்கதையாடலின் வடிவங்களே .. அ.ராமசாமியுடன் நேர்காணல்

படம்
உங்களுடைய இளமைக்காலம் குறித்து, குறிப்பாக இலக்கிய நாடகத்துறைக்கு நீங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் .... எனது இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல சிறப்பாக எதுவும் இல்லை. நான் வெளிப்படுத்துகின்ற கலை , இலக்கிய ஆர்வம் என்பது தானாக வந்ததில்லை. எனது கல்வியின் பகுதியாக நானே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற காலத்திலேயே கதை படித்தல், நாடகம் பார்த்தல், சினிமாவுக்குப் போதல் என்பதைச் செய்யும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் நான் அவற்றையே எனது படிப்புக்கான துறையாகவும் வேலைக்கான ஒன்றாகவும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துறையாகவும் ஆக்கிக் கொண்டேன் என்பதுதான் எனக்கு வாய்த்த ஒன்று.