இடுகைகள்

வெண்ணெயும் சுண்ணாம்பும்

தொழில் நுட்பத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களும் அறிவார்ந்த மனித உற்பத்தியும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு அடிப்படையான தேவைகள். இத்தேவைகளைத் தீர்க்கும் சக்தி உடையவை உயர்கல்வி நிறுவனங்கள் தான். தாராளமயப் பொருளாதாரத்தை முன்மொழியும் - உலகமயத்தைத் தீர்மானிக்கும்- உலக வங்கியும் மேற்கத்திய நாடுகளும் பின்னின்று இயக்க, நமது அறிஞர்களும் வல்லுநர்களும் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவித்துள்ளதே அதற்குச் சான்று. 

பரபரப்பின் விளைவுகள்

வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒருவிதத்தில் சமூகப் பொறுப்பு என்பதும், அரசியல் நோக்கம் என்பதும் பெருங்கதையாடலின் வடிவங்களே .. அ.ராமசாமியுடன் நேர்காணல்

படம்
உங்களுடைய இளமைக்காலம் குறித்து, குறிப்பாக இலக்கிய நாடகத்துறைக்கு நீங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் .... எனது இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல சிறப்பாக எதுவும் இல்லை. நான் வெளிப்படுத்துகின்ற கலை , இலக்கிய ஆர்வம் என்பது தானாக வந்ததில்லை. எனது கல்வியின் பகுதியாக நானே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற காலத்திலேயே கதை படித்தல், நாடகம் பார்த்தல், சினிமாவுக்குப் போதல் என்பதைச் செய்யும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் நான் அவற்றையே எனது படிப்புக்கான துறையாகவும் வேலைக்கான ஒன்றாகவும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துறையாகவும் ஆக்கிக் கொண்டேன் என்பதுதான் எனக்கு வாய்த்த ஒன்று.

நம்பிக்கை அளித்த மூன்று திரைப்படங்கள்

படம்
தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப் போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில், அமீர் இயக்கத்தில் வந்த பருத்தி வீரன் என்ற இரண்டு படங்கள் உருவாக்கி விட்ட அந்தப் பேச்சுக்களை ராமின் கற்றது தமிழ் அதிகமாக்கியது. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு இந்த நம்பிக்கையை இன்னும் கூடுதலாக்கக் கூடும்.

தமிழில் திருப்புமுனை நாடகங்கள்

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு மொழி இ¤லக்கிய ஆசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கம் சொல்ல முயலும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவாறாக உள்ளன. ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப்படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். தமிழ்¢ அலை வரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன. இந்தக் குழப்பம் பின் நவீனத்துவக் குழப்பம் என்று நினைத்து விட வேண்டாம்.