இடுகைகள்

நம்பிக்கை அளித்த மூன்று திரைப்படங்கள்

படம்
தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப் போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில், அமீர் இயக்கத்தில் வந்த பருத்தி வீரன் என்ற இரண்டு படங்கள் உருவாக்கி விட்ட அந்தப் பேச்சுக்களை ராமின் கற்றது தமிழ் அதிகமாக்கியது. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு இந்த நம்பிக்கையை இன்னும் கூடுதலாக்கக் கூடும்.

தமிழில் திருப்புமுனை நாடகங்கள்

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு மொழி இ¤லக்கிய ஆசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கம் சொல்ல முயலும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவாறாக உள்ளன. ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப்படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். தமிழ்¢ அலை வரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன. இந்தக் குழப்பம் பின் நவீனத்துவக் குழப்பம் என்று நினைத்து விட வேண்டாம்.

மும்முனைத் தாக்குதல் சச்சின், சந்திரமுகி, மும்பை எக்ஸ்பரஸ்

படம்
மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அதன் நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும் தமிழா்களின் தனி அடையாளங்கள் பற்றிப் பேசுகிறவா்கள் பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் மூன்று படங்கள் வெளிவந்தன. ’சச்சின்’, ’சந்திரமுகி’, ’மும்கை எக்ஸ்பிரஸ்’. இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

எல்லை தாண்டும் ஆசைகள்

ஒரு நிலப்பரப்பின் ஆட்சித்தலைவனைக் குறிக்கும் பலசொற்களுள் ஒன்று வேந்தன் என்பது .தன் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பில் வாழும் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தன் விருப்பம்போல வாழும்படியான உத்தரவுகளைச் சட்டங்களாக்கி ஆண்ட நிர்வாகிகளைக் குறிக்கப் பயன்பட்ட நிலமானிய காலப் பெயர்ச்சொல் அது. மன்னன், அரசன், போன்றன அதே அதிகாரங்களை எடுத்துக் கொண்ட நபர்களைக் குறிக்கப் பயன்பட்ட வேறு சொற்கள்.

நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்

படம்
19.10.2004 அன்று நான் வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்த விதப் பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.

தமிழ் எம்.ஏ.- தமிழின் பெயராலும் கொலைகள்

படம்
தமிழ்த் திரைப்பட உலகம் எப்போதும் ஏதாவது ஒரு முன் மாதிரியைப் பின்பற்றிச் செல்லும் மந்தைத் தனத்தைப் பின்பற்றும் இயல்புடையதாகவே இருக்கிறது. ஊரின் பெயரில் ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து ஊர்களின் பெயரைத் தலைப்பாக வைத்துப் படம் எடுப்பதுண்டு. இப்போதைய போக்கு ஒரு பெயரில் படத்தைத் தொடங்கிப் பின்னர் வேறு பெயரில் வெளியிடுவது என்று நினைக்கிறேன்.

நகல்களின் பெருக்கம்

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதின் முக்கிய வினையாக இருந்த வாசிப்பு நேரம் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கையளிக்கப் பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஒற்றை அலைவரிசையாக இருந்த அரசின் தொலைக் காட்சியோடு பல அலைவரிசைகள் போட்டி போட்ட நிலையில் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கும் விதமே மாறி விட்டதைக் கவனித்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே தொடு உணர்வு வழியே அலை வரிசைகளை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள். இலவசமாக அரசு தந்த 22 அங்குல நீளம் கொண்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டியில் கூட இந்த வசதி  இருக்கிறது.ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழகப் பரப்பில் வீட்டிற்குள் நுழைகின்றன. அவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழ் பேசுகின்றன. செய்தி அலைவரிசைகள் தினசரி நான்கந்து வெடிப்புச்செய்திகளை வெடிக்கச்செய்கின்றன. என்றாலும் ஒவ்வொரு அலை வரிசைகளின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வித்தியாசங்கள் இல்லை.   வேறுபாடுகள் கொண்டவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கோரக்கனவைக் கலைத்தல் வேண்டி

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

படைப்பாளுமையின் வெளிப்பாடுகள்: அது ஒரு கனாக்காலம், கஸ்தூரி மான்

படம்
அந்த வருடத் தீபாவளிக்கு வருவதாக இருந்த ஐந்து திரைப்படங்களில் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட படங்கள் மூன்று. பாலு மகேந்திராவின் ’அது ஒரு கனாக்காலம்’, லோகித்தாஸின் ’கஸ்தூரிமான்’, சேரனின் ’தவமாய் தவமிருந்து’. இப்படித் திட்டமிடுதலின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இயக்குநரின் அடையாளத்தைச் சொல்லும் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீா்மானம். அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காரணமும் அமைகின்றது.  அத்தகைய படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்து. படைப்பாளிகளின் அடையாளத்தோடு வரும் படங்களுக்குத்தான் இந்த ஆபத்து. ஸ்டார்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் ஆகத் துடிக்கும் நடிகா்களின் அடையாளத்தோடு வரும் படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை.

நோபல் பரிசு பெற்ற பிண்டர்

படம்
மரபுக்கலைகளிலிருந்து இந்திய நாடகத்தை உருவாக்குதல் என்னும் மோகினிப் பேய் இந்திய நாடகத் துறையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் - அநேகமாக 1993 ஆக இருக்கக் கூடும்- நானும் கேரளத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு நாடகம் படிக்க வந்திருந்த சிபு எஸ் . கொட்டாரம் என்ற மாணவனும் ஹெரால்ட் பிண்டரைப் (Harold Pinter) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நவீன நாடக்காரர்கள் பலருக்கும் கூட அந்த மோகினியிடம் காதல் இருந்த நேரம் தான். நானோ அந்தக் காதல், பெருந்திணைக் காதல் என்று நம்பியவன். சிபு எஸ் கொட்டாரத்திற்கும் அதே எண்ணம் உண்டு. இருவரும் பிண்டரைப் பற்றிப் பேசக் காரணமாக இருந்த நாடகம் பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday Party) தான். அது அவரது முக்கியமான நாடகம். அந்நாடகம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் தமிழில் மொழி பெயர்த்து மேடை யேற்றலாம் என்றும் அவர் சொன்னார்.

குஷ்பு:தமிழ் விரோதமா? பாதுகாப்பா?

படம்
இந்த இரண்டாம் கட்டப் போர் ஒருவிதத்தில் குதிரைப் படைத் தாக்குதல் என்று வருணிக்கத்தக்கது. சட்டம் என்னும் குதிரை ஏறி வாதம், மறுப்பு, சாட்சி, நிபந்தனைகள் என்று பலவித வாள்களுடன் தமிழ்ப் பண்பாடு காக்கும் வீரத்தமிழர்கள் நீதிமன்றக் களங்களில் குஷ்புவைச் சந்திக்கத் தயாராகியுள்ளனர். பழம்பெரும் நகரமான மதுரையம்பதியிலிருந்து தொடங்கிவிட்ட இந்தப் போர் திருச்சி, நெல்லை, சேலம் என்னும் மாநகரங்களின் மாவட்ட நீதிமன்றக் கூண்டுகளிலும், சங்கரன்கோவில், திருக்கோவிலூர், கோவில்பட்டி எனச் சிறு நகரங்களின் தாலுகா நீதிமன்றக் கூண்டுகளிலும் நடைபெறப்போகிறது. 

நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்

படம்
  சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து:  பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.

அழிபடும் அந்தரங்கம்

  பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந

அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?

படம்
  இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். 

பாடத்திட்ட அரசியல்

படம்
    ‘விழிப்பென்பது    இரு விழிகளையும்   சேரத் திறந்து   வைத்திருத்தல் அல்ல‘                                                     (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக)     என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப் பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன்.

பொருட்படுத்தப்படாத படங்களுக்குள் கவனிக்கப்பட்ட பாடல்கள் : வெகுமக்கள் ரசனையின் ஒரு பரிமாணம்

படம்
2 006 ஆம் ஆண்டிற்கான வசூல் வெற்றி – சூபர் ஹிட் படம் – எது? என்ற போட்டியில் இறங்கும் படம் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடல் எது? என்பது முடிவாகிவிட்டது. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்…… என்று தொடங்கும் சித்திரம் பேசுதடி படத்தின்   பாடலோடு போட்டியிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த வருடத்திற்குள் இன்னொன்று வரும் என்று தோன்றவில்லை. எப்.எம். தொடங்கிப் பாடல்களை ஒளிபரப்பும் இசை அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

காதல்: உண்மையின் மீது கட்டப்படும் விமரிசனம்

படம்
’காதல்’ – தமிழ் சினிமாவின் அடிப்படைக் கச்சாப்பொருள். காதலுக்குத் தமிழ் சினிமா செய்துள்ள மரியாதை கொஞ்சமல்ல. காரண காரியங்களோடும் காரணங்காரியங்கள் இல்லாமலும் ஓா் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்படுவதையும் அக்காதலைக் கல்யாணத்தில் முடித்துச் சுபம் போடுவதையும் விதம்விதமாகச் சொல்லிப் பார்ப்பதற்குத் தமிழ்ச் சினிமா சலிப்பே அடைந்ததில்லை. காதல் என்ற சொல்லோடு முன்னொட்டோ பின்னொட்டோ சோ்த்து விதம்விதமாகத் தலைப்பும் வைத்துப் பாரத்துவிட்டு இப்பொழுது ’காதல்’ என்ற பெயரிலேயே ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவுலகில் பிரமாண்டப் படங்களுக்குப் பெயா்போன ஷங்கரின் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராயிருந்த பாலாஜி சக்திவேல் அந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஊடகங்களும் அரசியலும்: மறத்தல் கொடியது ; மறக்கடித்தல் அதனினும் கொடியது

  தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகளின் கவனத்திலிருந்து கர்நாடகம் விலகிச் சென்று விட்டது. அம் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அரசியல்¢ கட்சிகள் செய்த சித்து விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து போகும். திரும்பவும் தேர்தல் வரும் போது கட்சிகளும் தலைவர்களும் புதிய கோஷங்களோடு வருவார்கள். ஊடகங்களும் பழையனவற்றை மறந்து விட்டு புதிய கோஷங்களின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் முன்னால் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கின்றன. இப்போது ஊடகங்களின் பார்வை கர்நாடகத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் பக்கம் திசை திரும்பி விட்டது.

கலகக்காரா் தோழா் பெரியார்

படம்
  ‘ நிஜ நாடகக் குழு‘ வினா் கடைசியாக நடத்திய இந்த நாடகத்தின் பெயா் கலகக்காரா் தோழா் பெரியார். அவா்களின் அடுத்த நாடகம் அண்ணல் அம்பேத்கா் பற்றியா….? எதிர்பார்ப்போம்.                            (வே. மதிமாறன் 2003 செப்டம்பா், தலித் முரசு 11) நவீன நாடகம் என்றாலே உள்ளடக்கத்தை விடவும் வடிவத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால் நாடகத்திற்குப் போவதா…..? வேண்டாமா? எனத் தடுமாறிய மதிமாறன் குழப்பம் தீா்ந்து பாராட்டியுள்ள வரிகள்.      “இந்த நாடகம் எளிமையான, நோ்த்தியான வடிவத்தோடு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் வடிவத்தையும் தாண்டி உணா்வோடு வெளிப்படுகிறது உள்ளடக்கம்.“