காமத்தை உயவு நோய் என்கிறாள் குறுந்தொகைப் பாடலில் இடம்பெறும் பெண்ணொருத்தி. அந்தப் பெண்ணை எழுதியவள் ஔவை என்னும் பெண். முட்டுவென்கொல் தாக்குவென்கொல் எனத் தொடங்கும் அந்தப்பாடல், உயவு நோய் கண்ட ஒருவர், செய்வது இன்னதென்று அறியாது செயல்களில் ஈடுபடுவர் என்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திர நடிகர் நிலையை அடைந்து கால் நூற்றுக்கும் மேலாகி விட்டது. 1996 இல் பாட்ஷா வெளிவந்த போது தமிழ்ச் சினிமாவின் உச்ச நடிகர் அவர்தான். கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது அப்போது. இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகும் தானே தமிழ்ச் சினிமாவின் உச்சநடிகர் என்று நம்புகிறார். தமிழ்ச் சினிமாவின் வணிகப்பரப்பும் நம்புகிறது. அந்த நம்பிக்கையைத் தக்க வைக்க அவர் தொடர்ந்து தனது உடலைப் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி முன்வைத்தபோது அறிஞர் பி.ஆ.அம்பேத்கர் இட ஒதுக்கீடு தேவை என்று வாதாடினார். அந்த வாதத்தில் இந்த இட ஒதுக்கீடு இந்தியாவிலிருக்கும் சாதீயப்படிநிலைகளை ஒழித்துக்கட்டிவிடும் என்று சொன்னதாகக் குறிப்புகள் இல்லை.