இடுகைகள்

அரங்கியல் அறிவோம்: நாடகத்தின் வடிவம்

நாடகத்தின் வடிவம் பற்றிப் பேசப்போனால் அதன் அடிப்படையான குணாம்சம் என்ன என்ற கேள்வி எழும். நாடகத்தின் அடிப்படையான குணாம்சம் முரண்( conflict) தானே.             முரண்தான் அடிப்படையான குணாம்சம். வெவ்வேறு தளங்களில் - வெளிப்படையாகவோ, வெளித்தெரியாமலோ- முரண் அமைகின்றபொழுது நாடகம் வடிவம் கொள்கிறது.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு ? மரணங்களைத் திட்டமிடவோ , தள்ளிப்போடவோ முயன்ற முயற்சி களுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.

தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

படம்
பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.

மா.அரங்கநாதனை நினைத்துக்கொண்ட போது

படம்
பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் (1989 -97) அடிக்கடி சென்னை போவதுண்டு. போகும்போது திரும்பத் திரும்பப் போன இடம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ புத்தகக் கடை. நாடகம் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என்பதோடு முன்றிலுக்குப் போய் வருவதும் முதன்மையான வேலையாக இருந்தது. சென்னை போவதற்கு முன்பே முன்றிலின் வாசகனாக இருந்த நான் மா. அரங்கநாதனை நேரில் பார்த்தது தி.ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் அலுவலகத்தில்தான். முன்றில் போய் அரட்டை அடிப்பது போலவே ரங்கநாதன் தெருவில் நடப்பதும் சுவாரசியமானது. சித்திரைத் திருவிழாவில் எதிர் சேவையில் நடக்கும் மனநிலையைத் தரும் நடை.