கோமகன் ******************************************************************** இன்றைய சமகாலத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் திறனாய்வு, நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, சஞ்சிகைகளின் ஆசிரியர் என்று பன்முக அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் பேராசிரியர் அ .ராமசாமி. ஆரவாரங்கள் இன்றி ச் செயலால் பலத்த அதிர்வலைகளை இவர் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரையில் இவரின் படைப்புகளாக நாடகங்கள் விவாதங்கள், ஒத்திகை, வட்டங்களும் சிலுவைகளும், சங்கரதாஸ் சுவாமிகள், பிரஹலாதா, முன்மேடை, தொடரும் ஒத்திகைகள், அரங்கியல் மற்றும் நாடகவியல் என 8 நூல்கள் அச்சில் வந்துள்ளன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் பண்பாடு மற்றும் பிம்பக்கூறுகள் பற்றிய விமரிசனக்கட்டுரைகள் கொண்ட தொகுதிகளாக - பிம்பங்கள் அடையாளங்கள், வேறு வேறு உலகங்கள், திசைகளும் வெளிகளும், மறதிகளும் நினைவுகளும் என நான்கு நூல்கள் வந்துள்ளன. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான பார்வைகளை முன்வைக்கக்கூடிய வகையில் அலையும் விழித்திரை, தமிழ் சினிமா: ஒளிநிழல் உலகம், ரஜினிகாந்த்: மாறும் காட்சிகள், தமிழ் சினிமா: அகவெளியும் புற