இடுகைகள்

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.

தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர்

படம்
ஒரு பெயரை உடன்பாட்டுநிலையில் தெரிந்து கொள்வதைவிட எதிர்மறையாகத் தெரிந்து கொள்வதே தமிழ்நாட்டில் அதிகம் நடக்கும். பல உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும், வரலாற்றறிஞர் பேரா. நொபுரு கரஷிமா (!933, ஏப்ரல், 24 - 2015 நவம்பர், 26) அப்படி அறியப்பட்ட பெயர்களுள் ஒருவராக இருந்தார் என்பதுதான் வருத்தமான வரலாறு. தி.மு.க. ஆட்சியின்போது (2006-2011) நடந்த செம்மொழி மாநாட்டை யொட்டித்தான் அவரது பெயர் பரவலாக அறிய வந்தது.

மணற்கேணியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்

முன்னுரை ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் இயல்பையும் இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப்போக்கிற்கான காரணங்களோடு அறிந்து கொள்ள வேண்டியது அடிப்படைத்தேவை. அந்தத்தேவை நிறைவேறும் போதுதான் அந்த நபர் தனது சொந்தப் பண்பாட்டுக்குள் இருப்பதை உணரமுடியும். ஒருவரின் தன்னிலை அல்லது இருப்பு என்பதே அவரது தாய்மொழியாலும், அதில் உருவான இலக்கியப்பிரதிகளாலும், அதன் வழியாக உருவாகும் பண்பாட்டுக் கூறுகளாலுமே உருவாக்கம் அடைகிறது.