இடுகைகள்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

படம்
பெருமாள் முருகனின் மாதொரு பாகனை அப்போது  வாசித்திருக்க வில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

நகரும் நதிக்கரையில் நடந்தபடி…

படம்
நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும் நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன். பயணங்கள் எப்போதும் பாதத்தின் நகர்வில் சாத்தியமாகக் கூடியவை. அசையாப் பாதங்கள் அலையா மனதின் உறைவிடம்.

தமிழ்கற்பிக்க ஒருகனவுநிறுவனம்.

படம்
வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையிலிருந்து திரும்பி வந்து ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. 2011 அக்டோபரில் போலந்தில் இந்தியவியல் துறை தொடங்கப்பெற்ற 80 -வது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. அதிலும் கலந்து கொண்டேன். நான் திரும்புவதற்கு மூன்று மாதம் முன்பு 2013- ஆம் ஆண்டு ஏப்ரலில் தமிழ்ப் பிரிவுக்கான 40 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல இந்தியவியல் துறைகள் உலகநாடுகள் பலவற்றில் இயங்குகின்றன.