சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்
பெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நவீன வாழ்க்கைமுறை பாரம்பரியமான இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போக்கில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்குதல் தொடுக்கிறது எனச் சொல்வதின் வழியாகவே நவீனத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டது.