இடுகைகள்

விளையாட்டுத் தனமான தேசம்

மக்களுக்கான பொதுப் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்களாக நீங்கள் இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட அலுவலகப் பணியாளர்களுக்கான சிறப்புப் பேருந்தில் பயணம் செய்கிறவர்களாகவும் இருக்கலாம். செப்டம்பர் 10 முதல் உங்கள் பயணத்தின் போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் கோப்பைக் கிரிக்கெட் பற்றி

விழுப்புண்களும் விழுத்தண்டுகளும்

   “ இன்று எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் ” என ஏதாவது ஒரு நாளைப் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். அப்படிக் கூறுபவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக விசாரித்துப் பாருங்கள். அந்த நாள் அவரது வாழ்க்கையில் நல்லது அல்லது கெட்டது என இரண்டில் ஒன்று நடந்த ஒரு நாளாக இருக்கும்.

மண்ணின் மைந்தர்களின் மறுபக்கம்

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

சமயங்களின் உள் முகங்கள்

ஒரு முன் குறிப்பு: நானும் ஜெயமோகனும் பரிமாறிக் கொண்ட  இந்தக் கடிதப் போக்குவரத்து சரியாக ஒருவருடத்திற்கு முந்தைய நிகழ்வு. இக்கடிதங்களில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமானவையாக இல்லை; பொதுவில் வைக்கப்பட வேண்டியவை என்று அப்போதே  தோன்றியது என்றாலும் பதிவேற்றம் செய்யவில்லை; காரணம் இருவருக்கும் எதோ பிரச்சினை எனக் கருதிக் கொள்ளும் சூழல் தான் காரணம். தமிழில் அறிவார்ந்த விவாதங்கள் தனி நபர் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்போது வலைப்பதிவில் ஏற்றுகிறேன்.