இடுகைகள்

சமயங்களின் உள் முகங்கள்

ஒரு முன் குறிப்பு: நானும் ஜெயமோகனும் பரிமாறிக் கொண்ட  இந்தக் கடிதப் போக்குவரத்து சரியாக ஒருவருடத்திற்கு முந்தைய நிகழ்வு. இக்கடிதங்களில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமானவையாக இல்லை; பொதுவில் வைக்கப்பட வேண்டியவை என்று அப்போதே  தோன்றியது என்றாலும் பதிவேற்றம் செய்யவில்லை; காரணம் இருவருக்கும் எதோ பிரச்சினை எனக் கருதிக் கொள்ளும் சூழல் தான் காரணம். தமிழில் அறிவார்ந்த விவாதங்கள் தனி நபர் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்போது வலைப்பதிவில் ஏற்றுகிறேன்.

ஏமாற்றங்கள்

இந்த ஏமாற்றம் ஒன்றும் புதியது அல்ல. சரியாகச் சொல்வதானால் நான் ஏமாறவில்லை என்பது தான் உண்மை. ஏமாந்தது சுந்தரமூர்த்திதான். ‘ ப்ளீஸ் டைம் ’ என்ற குரல்தான் அவளைப் பார்க்க வைத்தது. கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவளைப் பார்த்தேன். என்னை விடக் கூடுதலான உயரம். புருவங்களை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது. அவளைப் பார்க்க விரிந்த கண்கள் கடிகாரத்தைப் பார்க்கும் போது உதவ மறுத்தன. நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனதற்கு உள்ளே போயிருந்த ஜின் கூடக் காரணமாக இருக்கலாம். போதை அதிகம் இல்லையென்றாலும் தெளிவாக எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருந்தது. அவள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்ததைக் கவனித்த சுந்தரமூர்த்தி, என் கையை இழுத்து கடிகாரத்தைத் திருப்பி ‘ ஒன்பது நாற்பத்தி எட்டு’ என்று துல்லியமாகச் சொன்னான். அவ்வளவு துல்லியத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது சிரிப்பு வெளிப்படுத்தியது. சிரித்ததோடு ‘தேங்க் யூ வெரி மச்’ என்றும் சொன்னாள். அப்படிச் சொன்னபோது அவள் முகம் என்னிடமிருந்து சுந்தர மூர்த்தியிடம் திரும்பியிருந்தது.

வரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி

இந்தக் கண்காணிப்புப்பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து போகிறது. கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு தவிர ஆறுநாட்களும் அதே பேருந்தில் பயணம். குறிப்பிட்ட காலம் சார்ந்த வினைகள் எப்பொழுதும் ஒழுங்கினை உண்டாக்கி விடத்தக்கன. தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டியன. அதில் சிறு பிசகு நேர்ந்தாலும் மொத்த ஒழுங்கும் குலைந்து விடும் அபாயம் உண்டு. அப்படியானதொரு அபாயம் நிகழ்ந்து விடாமல் இருக்க, நான் கண்காணிப்பாளனாக அனுப்பப் பட்டேன். கண்காணிப்பு ஒருவிதத்தில் நம்பிக்கையின் அடையாளமும், இன்னொரு விதத்தில் நம்பிக்கை யின்மையின் வெளிப்பாடும்கூட . தனக்குக் கீழ் இருப்பவன் கண்காணிக்கப் பட்டால் ஒழுங்காகச் செயல்படுவான் என்பதான நம்பிக்கை.

உலகமயம் குறித்த முதல் விவாதம்: எதிரெதிர்த்திசைகளில்...

விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா.? நானா..? அத்துடன் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம் பெறும் விவாத நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி என்றும் ஊடகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் தன்மையுடன் கூடிய பாவனை அதற்கு உண்டு. அத்துடன், சமூகத்தின் பொதுப்புத்திக்குள் உறையும் பல்வேறு கருத்துக்களை சரி அல்லது தவறு என எதிரெதிராக அணி பிரித்து நிறுத்தி வைத்து விவாதங்களை நடத்தி இறுதியில் ஒரு தீர்வைச் சொல்லி விடும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் போன்றதல்ல என்பதுதான் அதன் பலம்.