எட்டுத் திக்கும் மதயானை
போருக்குப் பல கட்டங்கள். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு போராடும் போரை நான் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரியாத பண்பாட்டு வெளிகளில் நடக்கும் போர்களின் கட்டங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொல்லும் பெண்களாக இருக்கமுடியும். கருத்துச் சொல்பவர்கள் மட்டுமல்ல; நடந்துகொள்பவர்களும்கூட. அப்படி நடந்துகொண்டவர் ஸ்ரேயா என்னும் நடிகை.