மனிதநேயம் பேசிய தமிழ் நாடகங்கள்
கலை இலக்கியங்கள் மனிதவாழ்வின் அன்றாட நிகழ்வில் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடும். அதேபோல் கலையின் பணி ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றிக் காட்டுவது தான் என்பதிலும் ஒத்தகருத்தை எட்டிவிடமுடியாது. ஆனால் படைப்பின் உருவாக்கத்தில்,சமூகத்தின் இயங்குநிலைக்கும் கூட்டுச் சிந்தனைக்கும் முக்கியமான இடம் உண்டு என்பதை மறுப்பதற்கு அதிகமானபேர் இருக்கமாட்டார்கள். ஒரு படைப்பை-குறிப்பாக எழுத்து சார்ந்த கலைப்படைப்புகளை- தனியொரு மனித மனத்தின் பிரத்தியேகமான கணங்களின் வெளிப்பாடுகள் தான் எனச்சொன்னாலும் கூட்டுமனத்தின் நனவுமனமும் நனவிலி மனமும் ஆற்றும் வினைகளின் பங்களிப்பும் உண்டு எனச்சொல்லுவதும் அதன் மேல் விவாதங்கள் நடத்துவதும் உலகம் முழுக்க நடந்துவரும் அறிவார்ந்த சொல்லாடல்களின் இயல்பு.தனிமனிதனின் நனவுமனமும் நனவிலி மனமும் இயங்கும் காரணங்களைப்பற்றி உளவியலில் பலவிளக்கங்கள் தரப்படலாம். கூட்டுமனத்தின் நனவிலி மனம் தனியொரு அலகின் பிரதிநிதியாக அலைவதிலேயே ஆர்வம் கொண்டதாக இருக்கிறது என்றாலும் நனவுமனம் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கவே விரும்புகிறது. கலை இலக்கியத்துறைகளில் ஒ