கவனிக்கப்பட்டதின் பின்னணிகள்
தகவல்களும் நிகழ்வுகளும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் நேர்மறை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று.இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.