இடுகைகள்

அங்கீகாரத்தின் அளவுகோல்

படம்
கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி , அரிதாரத்தெ பூசிக்கொள்ள ஆசை.. நான்.. அடவு கட்டி ஆட்டம் போட ஆசை .. என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு. இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.

ஒற்றுமையில் வேற்றுமை

கல்வித்துறையில் மாற்றங்கள் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது. கடந்த ஆட்சி வரை கல்வித்துறை என்பது ஒரே அமைச்சரின் கீழ் இயங்கிய நிலையை மாற்றி, பள்ளிக் கல்விக்கென ஓர் அமைச்சரையும், கல்லூரிக்கல்வி தொடங்கி நடக்கும் உயர்கல்வித் துறைகளுக்கு இன்னொரு அமைச்சரையும் பொறுப்பாக்கியதே கூடக் கல்வித்துறை இந்த ஆட்சியில் கவனிக்கப் படத் தக்க துறையாக ஆகப் போகிறது என்பதன் குறிப்புணர்த்தலாக இருக்கலாம்.

அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் போன்றதல்ல என்பது பலருக்கும் தெரியும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குடியரசு நாட்டில், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஜான் மெக்கைன் என்னும் 71 வயது நபரைத் தனது வேட்பாளராக மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாது, ஜனநாயகக் கட்சி தான் வெற்றி பெறும் என ஊடகங்களும், கருத்துக் கணிப்புக்களும் சொல்ல , அதன் வேட்பாளராகப் போட்டியிடக் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்து விட்டது.

தமிழ் சினிமாவும் அதன் பார்வையாளா்களும்

படம்
நிகழ்காலத் தமிழா்களின் அன்றாட வாழ்க்கையில் சினிமாவைப் போல் பிரிக்கமுடியாத இன்னொன்றைச் சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை. புதியனவாகவும் பழையனவாகவும் பகுதிகளாகவும் முழுமையாகவும் தினசரி வாழ்வில் சினிமா பார்க்கப்படுகிறது.