இடுகைகள்

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்

படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும்

தீர்க்கவாசகன் கவிதைகள்-2

கறுப்பின் பயணம்

தற்காலிக விளையாட்டுகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.

மணிரத்னம் : கருத்தியல்களைக் கலையாக்கும் படைப்பாளி

படம்
மணிரத்னம் தமிழ்ச் சினிமாவில் தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ள இயக்குநர்களில் ஒருவர். 1983 தொடங்கி 2007 வரையுள்ள 24 வருடங்களில் 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார் . பல்லவி அனுபல்லவி (1983) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 1987- எடுத்த நாயகன் படத்தின் மூலம் இந்திய இயக்குநராக உருமாற்றம் அடைந்தவர். 1994- இல் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் அவரது இயக்கத்தில் வந்த படங்களின் தொகுப்பு பார்வையாளர் களுக்குக் காட்டப்பட்டது மூலம் உலகத் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர். இந்தக் கட்டுரை மணிரத்னத்தின் கருத்தியல் சார்ந்த பயணத்தைக் கோடிட்டுக் காட்டுவதோடு, கடைசியாக வந்த குரு படத்தின் வழி அவரது கலைக் கோட்பாடு எத்தகையது என விவாதிக்கிறது