இடுகைகள்

நூல்களின் உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகங்கள் வாங்கிய கதைகள்

சொந்தமான முதல் புத்தகம் சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவற்றில் இருப்பனவற்றில் பாதி நூல்கள் நான் வாங்கியவை; இன்னொரு பாதி நண்பர்களும் நூலாசிரியர்களும் எனது வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொடுத்தவை. பள்ளிப்படிப்பில் என்னுடைய பெயரெழுதிப் பரிசாகக் கிடைத்த அந்த நூலைத்தான் எனது முதல்நூல் எனச் சொல்லவேண்டும். அண்ணாவிற்குப் பின் முதல்வராக வந்த கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம் ஆனது. அந்தப் பொதுத்தேர்வுக்கு மாதிரித்தேர்வொன்றைக் கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தவேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று உசிலம்பட்டிக் கல்வி மாவட்ட நடத்தினார். அந்தத் தேர்வில் முதலிடம் பெற்றேன். அதற்காக வழங்கப்பெற்ற பரிசாகக் கிடைத்த அந்த நூலின் பெயர்: பொழுதுபோக்குப் பௌதிகம். நூலாசிரியரின் பெயர் யா.பெரல்மான். வெளியீடு மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம். மொழிபெயர்ப்பு நூல்.

சூழலில் வாழ்தலும் எழுதுதலும்

படம்
அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.

சென்னைப் புத்தகக்கண்காட்சி பரிந்துரைகள் -3

சிறுகதைகள் அறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வாசித்த ஆண்டுகளாகக் கடந்த மூன்றாண்டுகளைச் சொல்லலாம். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்காலம் இணையத்தில் வாசிப்பை அதிகப்படுத்தியிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம். 2022 -இல் கடையாக வாசித்த கதைத் தொகுதி ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. அதேபோல் தொகுதியின் எல்லாக்கதைகளையும் வாசித்து முன்னுரை எழுதிய தொகுப்புகள்: பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையும் ஒரு காடு, அம்பிகா வர்ஷினியின் சிதைமுகம், எல்லாஅக்கதைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இமையத்தின் தாலிமேல சத்தியம் தொகுப்பின் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். சுஜித் லெனின் தொகுப்பு வந்திருக்கிறது. அவரது பெரும்பாலான கதைகள் வாசிக்கப்பட்ட கதைகள். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகைநூலையும் வாங்கி வைத்துள்ளேன். அதில் உள்ள கதைகள் பாதிக்கு மேல் முன்பே வாசித்தவை. இவர்கள் அல்லாமல் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள் ---& பிறகதைகள் என்ற வகைமைத் தொகுப்புகளாக 2022 இல் வந்த தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டுக்கும் அந்த வகைமைத் தொகுப்புகள் பலவற்றை

சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி

இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். இவை படித்த நூல்கள். படிக்கச் சொல்கிறேன். படித்துப்பாருங்கள்

எழுதுவதும் பேசுவதுமாய்- ரவிக்குமாரின் இரண்டு நூல்களை முன்வைத்து

படம்
கண்காணிப்பின் அரசியல் உரையாடல் தொடர்கிறது இரண்டு நூல்களும் 1995 இல் விளிம்பு ட்ரஸ்ட்/ விடியல் வெளியீடுகளாக வந்தன. முன்னது ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பின்னது அவர் மொழிபெயர்ப்பு செய்த பேட்டிகளும் எழுத்துகளும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல்.

மேற்கின் திறப்புகள்: தேடிப்படித்த நூல்கள்

எனது மாணவப்பருவத்தில் ஐரோப்பிய இலக்கியப் பரப்பையும் கருத்தியல் போக்குகளையும் அறிமுகம் செய்த நூல்களில் இந்த மூன்று நூல்களுக்கும் முக்கியப்பங்குண்டு. இந்த அறிமுகங்களுக்குப் பின்னரே முழு நூல்களைத்தேடிப் படித்திருக்கிறேன். 2000 -க்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் நடந்த சோதனை முயற்சிகள், ஆக்க இலக்கியங்கள் போன்றவற்றை  அறிமுகம் செய்யும் நூல்கள் தமிழில் வரவில்லை

இரண்டு தொடர் ஓட்டக்காரர்கள் - ஜெயமோகனும் அபிலாஷும்

ஜெயமோகனின் கட்டண உரை திருநெல்வேலியில் கட்டண உரைக்கூட்ட அறிவிப்பு வெளியான நாளிலேயே முடிவுசெய்திருந்தேன். ஜெயமோகனின் உரையைக் கேட்க வேண்டும் அதற்காக அந்த நாளில் நெல்லையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன்.அது நடந்தது.

தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன.

சில மாயைகளும் சந்தேகங்களும்

படம்
கருத்தியல் விவாதங்களைத் தீர்மானிப்பதிலும் இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பதிலும் சில நூல்கள், சில ஆளுமைகள், சில நிகழ்வுகள், சில பத்திரிகைகள் முக்கியப்பங்காற்றுவதின் மூலமாக வரலாற்றின் பங்குதாரராக மாறுவிடக்கூடும். அப்படியான இரண்டை இங்கே பார்க்கலாம். இவை 2000 -க்கு முன் நடந்தவை. இப்போது இப்படியானவற்றைக் கண்டுபிடித்து முன்வைக்க முடியவில்லை.

சென்னைப் புத்தகக் காட்சி -2019: சில குறிப்புகள்

படம்
எப்போதும்போல இந்த ஆண்டும் சென்னைப் புத்தக காட்சியில் சில நாட்களைச் செலவழிக்க முடிந்தது. வாங்குபவர்களின் வருகை, விற்பனையின் போக்கு, புதிய நூல்களின் வருகையும் எதிர்கொள்ளப்படும் போக்கும் போன்றனவற்றை மனதில் இருத்திகொண்டு புத்தகக் காட்சியைச் சுற்றிவருபவன் நான். அப்படிச் சுற்றுவதன் பின்னணியில் நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைசெய்யும் வேலை எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த வேலை இல்லை. அடுத்த ஆண்டுமுதல் இருக்கப்போவதில்லை.

இற்றைப் படுத்தும் சொற்கள்: ரவிக்குமாரின் விமரிசனப்பார்வை

ரோம் நகரில் வாழும்போது ரோம் நகரத்தவனாக இருக்கவேண்டும் என்றொரு சொற்கோவையைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கலாம். இந்தச் சொற்கோவைக்குப் பின்னிருப்பது வாழிடத்தோடு பொருந்திப் போகிறவர்கள் தாக்குப் பிடிப்பார்கள்; வாழித்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதுதான். நாம் வாழும் வெளியை உணர்தலை வலியுறுத்தும் இச்சொற்கோவை, பொதுவான வாழ்தலுக்குச் சொல்லப்பட்ட ஒரு மரபுத்தொடர். இம்மரபுத்தொடரை ஆய்வு அல்லது திறனாய்வு போன்ற சிறப்புத்துறைக்குள் இயங்குபவர்களுக்குப் பொருத்தும்பொழுது அப்படியே ஏற்கவேண்டியதில்லை. இங்கே வெளிக்குப் பதிலாகக் காலத்தை மையப்படுத்த வேண்டும். காலத்தை மையப்படுத்தும்போது நிகழ்ந்த காலமும் நிகழ்த்தப்படும் காலமும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே

தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

படம்
பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.

திறமான ஆய்வு நூல்கள் - தேடிப்படித்த நூல்கள்

 கல்விப்புலப்பார்வையில் திறமான ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுநோக்கைத் திறத்துடன் வெளிப்படுத்திய ஆய்வுநூல்கள் இவை

இரண்டு புத்தகங்கள்

படம்

கதவு திறக்கட்டும்

” உறவுப்பாலம் -இலங்கைச் சிறுகதைகள்”” இப்படியொரு தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் மொத்தம் 25 சிறுகதைகள் (சிங்களமொழியிலிருந்து 8; தமிழிலிருந்து 7; ஆங்கிலத்திலிருந்து 10) தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர் ராஜீவ் விஜேசின்ஹ. இவருக்கு இத்தொகுப்பை உருவாக்குவதற்குச் சிங்கள மொழிக் கதைகளுக்காக விஜிதா பெர்னாண்டோவும் தமிழ்க் கதைகளுக்காக விமரிசகர் கே.எஸ்.சிவக்குமரனும் உதவியிருக்கிறார்கள்.தமிழின் பிரதிநிதிகளாக டி.எஸ்.வரதராஜன், கே.சட்டநாதன், என். எஸ், எம்.ராமையா, செ.யோகநாதன், தாமரைச்செல்வி, ஐயாதுரை சாந்தன், ரஞ்சகுமார் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

தொடரும் இலங்கைத் தமிழர் போராட்டம் : இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

படம்
செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இத்தொகுப்பிற்கு அவர் வைத்துள்ள பெயர்   வேரோடு பிடிங்கப்பெற்ற பூசணிக்கொடி( Uprooting the Pumpkin -Selections from Tamil Literature in Sri Lanka edited Chelva Kanaganayakam Oxford University Press). இத்தொகுப்பில் அரைநூற்றாண்டுக்கால இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க பதிவுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிற்றி பிரஸின் வெளியீடான இத்தொகுப்பு உலகமனச்சாட்சியை நோக்கிப்பேசும் தன்மைகொண்ட தொகுப்பு. தொகுப்பாசிரியர் வைத்த ஆங்கிலச் சொற்களை நேர்பொருளில் அப்படியே மொழிபெயர்த்து ஏற்றுக்கொள்ள என் மனம் விரும்பவில்லை. ஏனென்றால் சூழல் தந்துள்ள அர்த்தம் வேறொன்றாக இருக்கிறது.

ஏற்கத்தக்க தொனியல்ல

படம்
இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மணற்கேணி - அறிமுகம்

1989 இல் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற சில மாதங்களுக்குள் அவருடன் ஏற்பட்ட நட்பு இன்றளவும் தொடரும் ஒன்று. தொண்ணூறுகளில் தமிழ் அறிவுச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் முன் வைப்புக்களுக்கும் , செயல்தள மாற்றங்களுக்கும் , விமரிசனத் திசை அறிதலுக்கும் மையமாக இருந்தவர் ரவிக்குமார் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.