உரையும் உரையாடல்களும்
அண்மைக்காலமாகத் தினசரி உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சுருதி இலக்கிய அலைவரிசை தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்பு சென்னை போன்ற பெருநகரங்களின் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலையை அதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளமுடிகிறது. குறிப்பிட்ட ஆளுமைகளின் உரைகள் என்று தேர்வு செய்து கேட்ட நிலையைக் கைவிட்டுவிட்டு ஒரு நிகழ்வில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரின் உரைகளைக் கேட்கும் ஆர்வம் தோன்றியிருக்கிறது. இப்போது அதற்காக நேரம் ஒதுக்கவும் முடிகிறது. சுருதி இலக்கிய அலைவரிசையையும் தாண்டித் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் காணொளிக் காட்சிகளும், தனி அமைப்புகள் ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் காணொளிகளும் பார்க்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதைவிடக் கேட்கத்தக்கனவாக இருக்கின்றன. காலை, மாலை நடைகளின் போது கிடைக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்கிவிடுகிறேன். இதன் பின்னணியில் நானும் பேச்சாளனாக ஆகவிரும்பும் மனநிலை மாற்றமும் இருக்கிறது. நூல் வெளியீடுகள், கருத்தரங்கப் பேச்சுகள், இலக்கியவிழா உரைகள் என்பதைத் தாண்டி வெவ்வேறு அமைப்புகளின் உரைகளைக் கேட்கிறது. கடந்த மாதம் மே. 17 அமைப்பினர் ஏற்பாடு செய்த அறிஞர் அவையம